'டபுள் அட்டாக்'!: 6 திரிணமூல் அமைச்சர்களும் ராஜினாமா: மத்திய அரசுக்கும் மம்தா ஆதரவு வாபஸ்!

டீசல் விலை உயர்வு, சிலிண்டர் கட்டுப்பாடு மற்றும் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு ஆகியவற்றுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. மத்திய அரசின் இந்த நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள 72 மணி நேர கெடுவையும் திரிணாமுல் காங்கிரஸ் விதித்திருந்தது. ஆனால் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. இதனால் மத்திய அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொள்வதாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமான மமதா பானர்ஜி அறிவித்திருந்தார்.
ராஜினாமா ஒப்படைப்பு
மமதா அறிவித்திருந்தபடி இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் மன்மோகன்சிங்கை நேரில் சந்தித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 6 அமைச்சர்களும் தங்களது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தனர்.
ராஜினாமா செய்தவர்கள் யார்?
ரயில்வே அமைச்சராக இருந்த முகுல் ராய், சுற்றுலா துறை இணை அமைச்சரான சுல்தான் அகமத், சுகாதாரத் துறை இணை அமைச்சரான சுதிப் பந்தோ பாத்யாய, ஊரக வளர்ச்சித்துறை இணை அமைச்சரான ஷிஷிர் அதிகாரி, தகவல் தொடர்புத்துறை இணை அமைச்சரான சவுத்திரி மோகன் ஜாதுவா, நகர்ப்புற வளர்ச்சித்துறை இணை அமைச்சரான சாவுகதா ராய் ஆகியோர் தங்களது ராஜினாமா கடிதத்தை பிரதமர் மன்மோகன்சிங்கிடம் கொடுத்துள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுதிப் பந்தோ பாத்யாய, திரிணாமுல் முடிவு தமக்கு வருத்தம் அளிக்கிறது என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறியதாகத் தெரிவித்தார்.
ஆதரவும் வாபஸ்
பிரதமரிடம் ராஜினாமா கடிததத்தை கொடுத்த கையோடு குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்று பிரணாப் முகர்ஜியிடம் காங்கிரஸ் கட்சியை கை கழுவிவிட்டோம் என்பதற்கான கடிதத்தையும் ஒப்படைத்தனர் திரிணாமுல் காங்கிரசார். கடந்த 40 மாதங்களுக்கு மேலாக காங்கிரஸ்- திரிணாமுல் காங்கிரஸ் இடையே இருந்து வந்த உறவு இப்போது முறிந்துபோய்விட்டது!
அந்தரத்தில் தொங்கும் அரசு
திரிணாமுல் காங்கிரசின் ஆதரவை பறிகொடுத்துவிட்ட காங்கிரஸ் கட்சி இப்பொழுது சிறுபான்மை அரசாகிவிட்டது! திரிணாமுல் காங்கிரசுக்கு மொத்தம் 19 எம்.பிக்கள் உள்ளனர். இப்பொழுது திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவை திரும்பப் பெற்றிருப்பதால் மத்திய அரசின் பலமானது 254 ஆகக் குறைந்துவிட்டது. மத்திய அரசுக்கு பெரும்பான்மைக்கு மொத்தம் 273 எம்.பிக்கள் தேவை. இதனால் மன்மோகன்சிங் அரசு ஆட்டம் கண்டுள்ளது. இருப்பினும் முலாயம்சிங் யாதவின் சமாஜ்வாதி கட்சி மற்றும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை வெளியில் இருந்து ஆதரவு தருவதால் தப்பித்தோம்! பிழைத்தோம் என்ற நிலையில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது மன்மோகன்சிங் அரசு!
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications