மேலூரில் முறைகேடாக செயல்பட்ட 95 கிரானைட் குவாரிகளுக்கு நோட்டீஸ்
மதுரை: மேலூர் பகுதியில் முறைகேடாக செயல்பட்டதாகக் கூறி 95 குவாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் உள்ள கிரானைட் குவாரிகளில் நடந்த முறைக்கேடு தொடர்பாக அரசுக்கு ரூ.16,000 கோடி இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து 6 சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 24 அதிகாரிகள் அடங்கிய குழுவினர் கடந்த 46 நாட்களாக ஆய்வு செய்தனர். 175 குவாரிகள் மேலூர் பகுதியில் வெட்டி எடுத்த கற்களை அளவீடு செய்தனர். இந்த தொடர் சோதனைகளில் 95 குவாரிகளில் முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கிரானைட் குவாரி நடத்த உரிமம் கொடுக்கப்பட்டதை உரி்மையாளர்கள் தவறாக பயன்படுத்தி சட்டவிரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்தது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் மேலூர் தாலுகா அலுவலகத்தில் பட்டா மாறுதல் தொடர்பான 94 பைல்கள் காணாமல் போனது. இதில் 14 பைல்கள் கண்டுபிடிக்கப்பட்டது. முறைகேடாக கற்கள் வெட்டி எடுத்த குவாரிகளின் உரிமம் ரத்து செய்யப்படுகிறது. இதுவரை 95 குவாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications