மதுரை அழகிரி- ஸ்டாலின் கோஷ்டிகளை அழைத்து பஞ்சாயத்து பேசுகிறது திமுக மேலிடம்
Subscribe to Oneindia Tamil

மதுரையில் கடந்த மார்ச் மாதம் திமுக இளைஞர் அணி நேர்காணல் மற்றும் விலைவாசி உயர்வைக் கண்டித்து நடந்த பொதுக்கூட்டம், டெசோ மாநாட்டு விளக்க பொதுக்கூட்டம், குஷ்பு பொதுக்கூட்டம் என அனைத்திலும் மு.க.அழகிரி ஆதரவாளர்கள் புறக்கணித்த நிலையில் கடந்த வாரம் மதுரை மாநகராட்சியில் நடந்த ஊழலை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்களுக்கு இடையே அடிதடியே நடந்துவிட்டது.
இருதரப்புக்கும் இடையே மோதல் உச்சகட்டத்தை அடைந்துவிட்ட நிலையில் அதிர்ச்சியில் உறைந்துபோய் கிடக்கிறது திமுக தலைமை. இதைத் தொடர்ந்து இரண்டு கோஷ்டிகளையும் சென்னைக்கு வருமாறு திமுக மேலிடம் அழைத்துள்ளது. இந்தக் கூடத்தில் அழகிரியும் அவரது ஆதரவாளர்களும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
திமுக தலைமை நடத்தப் போகும் இந்த கட்டப் பஞ்சாயத்திலாவது கைக்கலப்பு வராமல் இருந்தா சரி!












Click it and Unblock the Notifications