தமிழக மின் உற்பத்தி குறித்த வெள்ளை அறிக்கை தேவை: ராமதாஸ் வலியுறுத்தல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டின் மின் உற்பத்தி திட்டங்கள் குறித்த வெள்ளை அறிக்கையை அரசு வெளியிடவேண்டும் என்று ஏற்பட்டுள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது :

முடங்கும் பொருளாதாராம்

காற்றாலை மின் உற்பத்தி தடைபட்டதையடுத்து, தமிழகம் முழுவதும் 10 மணி நேரம் முதல் 16 மணி நேரம் வரை அறிவிக்கபடாத மின்வெட்டு நடைமுறைப்படுத்தபட்டு வருகிறது.கோவை, திருப்பூர் மாவட்டங்கள் உட்பட அனைத்து மாவட்டங்களிலும் தொழில் உற்பத்தியும், விவசாயமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்;மாணவர்கள் தேர்வுக்கு படிக்க முடியவில்லை; மக்கள் நிம்மதியாக தூங்க முடியாமல் அவதிபடுகின்றனர். இதேநிலை நீடித்தால் தமிழகத்தின் பொருளாதார செயல்பாடுகள் அடியோடு முடங்கிவிடும் ஆபத்து உள்ளது.

வெள்ளை அறிக்கை

ஆட்சிக்கு வந்தால் 3 மாதங்களில் மின்வெட்டை போக்குவதாக உறுதி அளித்த முதலமைச்சரால், கடந்த 15 மாதங்களில் ஒரு மெகாவாட் மின்சாரத்தைக் கூட கூடுதலாக உற்பத்தி செய்ய முடியவில்லை. திறமையற்ற நிர்வாகத்தின் காரணமாக தமிழகத்தின் மின் உற்பத்தியை கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 2300 மெகாவாட் குறைத்தது தான் அ.தி.மு.க. அரசின் சாதனை ஆகும். மின்வெட்டை போக்குவதில் தமிழக அரசு தோல்வி அடைந்து விட்டதை சென்னை உயர்நீதிமன்றமும் சுட்டிக்காட்டியிருக்கிறது.

மக்களின் எந்த பிரச்சினையையும் தீர்ப்பதில் அக்கறை காட்டாத தமிழக அரசு , தொடர் மின் வெட்டால் மக்கள் படும் துயரங்களை பார்த்த பிறகாவது, அதை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி தமிழகத்தில் மின்வெட்டே இருக்காது என்பதை உறுதி செய்ய நீண்ட கால திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இதற்காக தமிழகத்தின் ஒட்டுமொத்த மின்தேவை எவ்வளவு? மின் உற்பத்தி எவ்வளவு? நடைமுறையில் உள்ள மின் திட்டங்கள் எத்தனை? அந்த திட்டங்கள் எந்த கட்டத்தில் உள்ளன? என்பது குறித்த வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும்.

மின் உற்பத்தித்துறை

தமிழ்நாட்டில் 6 மின் திட்டங்கள் அறிவிக்கபட்ட நிலையிலேயே, எந்த முன்னேற்றமும் இல்லாமல் கிடப்பில் போடபட்டிருக்கின்றன. இந்த திட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தி, விரைவாக செயல்படுத்தி முடிப்பதற்காக, மின் உற்பத்தித் துறை என்ற பெயரில் தனித்துறையை ஏற்படுத்தி அதற்கு திறமையான அமைச்சரையும் , செயலாளரையும் தனியாக அமர்த்த வேண்டும். அப்போது தான் தமிழகத்தின் மின்வெட்டு பிரச்சினைக்கு உடனடியாக இல்லாவிட்டாலும், அடுத்த ஒரு சில ஆண்டுகளிலாவது நிரந்தர தீர்வு காண முடியும். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+