திருமண மோசடி வழக்கு: கேரள அழகி ஷானாஸின் ஜாமீன் மனு தள்ளுபடி

சென்னை மற்றும் கேரளாவில் பல இளைஞர்களை ஏமாற்றி திருமணம் செய்து அவர்களிடம் இருந்து நகை மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடிய கேரளாவைச் சேர்ந்த பெண் ஷானாஸ் அண்மையில் சென்னை போலீசாரால் கைது செய்யப்பட்டார். சென்னையைச் சேர்ந்த சரவணன் என்பவர் ஷானாஸ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றி தன்னிடம் இருந்து தங்க சங்கிலியை எடுத்துச் சென்றதாக புகார் கொடுத்தார்.
அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் ஷானாஸை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அவர் ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி பொன். கலைராஜன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அவர், வழக்கு விசாரணை ஆரம்பக்கட்டத்தில் உள்ளதால் ஜாமீன் வழங்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.
சரவணன் தவிர ராஜா என்பவரும் ஷானாஸ் மீது புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் முதல் வழக்கில் கைதாகி புழல் சிறையில் இருந்த ஷானாஸை இந்த வழக்கிலும் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஷானாஸ் தங்களை ஏமாற்றியதாக வாலிபர்களும், ஆண்கள் தான் தன்னை ஏமாற்றியதாக ஷானாஸும் தெரிவித்திருந்தனர்.












Click it and Unblock the Notifications