இஸ்ரோ தலைமையகத்திற்குள் நுழைந்த பெண்ணுக்கு உதவிய என்ஜினியர் சிக்குகிறார்
பெங்களூர்: பெங்களூரில் உள்ள இஸ்ரோ தலமையகத்திற்குள் பெண் ஒருவர் போலி ஐடி கார்டை காட்டி நுழைய உதவியவர் அங்கு வேலை பார்க்கும் ஒரு என்ஜினியர் தான் என்பது தெரிய வந்துள்ளது.
பெங்களூரில் உள்ள இஸ்ரோ தலைமையகத்திற்குள் போலி ஐடி கார்டை காட்டி நுழைந்து அங்குள்ள விருந்தினர் மாளிகையில் தங்கிய பெண் ஜூலா கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். அதன் பிறகு அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று அவர் கணவர் சொல்லித் தெரிய வந்தது. இந்நிலையில் ஜூலாவின் செல்போனை சோதனை செய்ததில் அதில் இஸ்ரோவில் பணிபுரியும் என்ஜினியர் ஒருவரின் எண் இருந்தது. ஜூலாவும், அந்த என்ஜினியரும் இஸ்ரோ வளாகத்தில் ஒன்றாக நடந்து சென்றதை பாதுகாவலர்கள் உள்பட சில ஊழியர்கள் பார்த்துள்ளனர்.
இதையடுத்து அந்த என்ஜினியர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று தெரிகிறது. அண்மையில் இஸ்ரோவில் நடந்த முக்கிய கருத்தரங்கிற்கு அந்த என்ஜினியர் தான் ஏற்பாடு செய்துள்ளார். அந்த கருத்தரங்கிற்கு வந்தவர்களுக்கு அவர் தான் ஐ.டி. கார்டுகள் கொடுத்துள்ளார். அப்படியே ஒரு கார்டை எடுத்து ஜூலாவின் பெயரைப் போட்டு, அவர் ஒரு சுற்றுச்சூழல் விஞ்ஞானி என்று குறிப்பிட்டு அதை அப்பெண்ணிடம் கொடுத்துள்ளார்.
அந்த ஐடி கார்டில் சீல் இல்லை, ஹோலோகிராம் இல்லை இப்படி ஒரு போலி கார்டை காட்டி அவர் எப்படி உள்ளே நுழைந்தார் என்று போலீசார் வியக்கின்றனர்.












Click it and Unblock the Notifications