பெயர்: பி.ஆர்.பி என்கிற பழனிச்சாமி.. வழக்குகள் எண்ணிக்கை 13!
மதுரை: கிரானைட் ஊழல் வழக்கில் சிக்கி கைதாகியுள்ள தொழிலதிபர் பிஆர்பி என்கிற பழனிச்சாமி மீது 13வதாக ஒரு வழக்கு போடப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் கிரானைட் வெட்டி எடுக்கப்பட்டதில் முறைகேடு நடந்ததாகவும் இதனால் அரசுக்குப் பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் முன்னாள் ஆட்சித் தலைவர் சகாயம் அரசுக்கு சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து தற்போதைய ஆட்சித் தலைவர் அன்சுல் மிஸ்ரா மற்றும் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் ஆய்வு நடத்தி வருகின்றனர். இதில் பி.ஆர்.பி. நிறுவனத்தின் மீது பல்வேறு புகார்களின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதில் கீழவளவு போலீசில் 6 வழக்குகளும், ஒத்தக்கடை போலீசில் 4 வழக்குகளும், மேலூர் போலீசில் ஒரு வழக்கும், மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சுந்தராபுரம் அக்ரஹாரத்தை சேர்ந்த கணேசன் மனைவி ராணி மதுரை மாவட்ட எஸ்.பியிடம் புகார் மனு ஒன்று அளித்தார்.
அதில், மேலூரை அடுத்த இ.மலம்பட்டியில் நான் எனது கணவர் மற்றும் அவரது தாயார் ஆகியோர் வசித்து வந்தோம். எனது கணவர் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று விட்டதால், எனது தந்தையின் வீட்டிற்கு வந்துவிட்டேன். இதற்கிடையில் எனது மாமியார் இறந்து விட்டார். அதற்கு நான் சென்றிருந்தேன். அப்போது அங்கு எனது கணவருக்கு சொந்தமான 52 சென்ட் நிலம் அபகரிக்கப்பட்டது போனது தெரியவந்தது.
அந்த இடத்தில் பி.ஆர்.பி. நிறுவனத்தினர் கிரானைட் கற்களால் மறைத்திருந்தனர். இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது, எனது கணவர் அந்த நிலத்தை அடமானம் வைத்ததாக கூறினர். மேலும், எனது கணவரைப் போல போலி கையெழுத்து போட்டு மோசடி செய்துள்ளனர். இதைப் பற்றிக் கேட்டதற்கு கொலை மிரட்டலும் விடுத்தனர் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து பழனிச்சாமி, சுரேஷ் உள்ளிட்ட6 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பழனிச்சாமி மீது போடப்படும் 13வது வழக்காகும் இது.
ஏற்கனவே பழனிச்சாமி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications