திடீரென கருமேகங்கள் சூழ்ந்த சென்னை.. சூறாவளி, முறிந்தன மரங்கள்..தூசு மண்டலம், பேய் மழை-மக்கள் பீதி!!

இந்த பயங்கர சூறாவளிக் காற்றில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. நகரின் பெரும்பாலான பகுதிகளில் மின் வினியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று மாலை திடீரெண என்று கருமேகம் கூடியதால் தலைநகரமே இருண்டது. சற்று நேரத்தில் சூறாவளிக் காற்று வீசவே சாலையோரங்களி்ல் இருக்கும் மரங்கள் வேரோடு பெயர்ந்து விழுந்தன.
தூசி மண்டலத்துடன் மிக பலத்த காற்று வீசியதால் இரு சக்கர ஓட்டிகள் பெரும் திணறலுக்கு உள்ளாயினர்.
இந் நிலையில் சில இடங்களில் பலத்த மழையும் பெய்யவே சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக கடலோரப் பகுதிகளில்தான் சூறாவளிக் காற்றுடன் மழை பெய்து வருகிறது.
இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழையால் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. தலைநகரின் பல்வேறு பகுதிகளி்ல் மழையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
அதே போல புறநகர் ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து வெளியூர் கிளம்பும் பல ரயில்களும் தாமதமாகியுள்ளன.
இந்த மழையின் வரவு குறித்து எந்தத் தகவலையும் முன்பே தெரிவித்தாக வானிலை மையம், இந்த திடீர் மழை நீடிக்கும் என்று தெரிவித்துள்ளது.
பெரும் மிரட்டலாக வந்த இந்த திடீர் சூறாவளிக் காற்று மற்றும் மழையால் மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications