கூடங்குளம் மக்களின் அடுத்த கட்ட போராட்டம் ... மணல் சமாதி!
Subscribe to Oneindia Tamil

காலை தொடங்கி மாலை 4 மணி வரை இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. நேற்று கிராம மக்கள் சார்பில் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் கல்லறைத் தோட்டத்திலும் குழுமி நூதனப் போராட்டங்களை நடத்தினர்.
கல்லறைகளில் குடியேறும் இந்த நூதனப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதனால் கல்லறைத் தோட்டங்களில் நேற்று கூட்டம் நிரம்பி வழிந்தது. இந்த நிலையில் இன்று கடல் மணலில் உடலைப் புதைத்துப் போராட்டம் நடத்துகின்றனர்.
2 வாரங்களுக்கு முன்பு கூடங்குளம் அணு மின் நிலையம் அருகே ஆயிரக்கணக்கான கிராம மக்கள் கூடி முற்றுகைப் போராட்டம் நடத்தினர். அவர்களைப் போலீஸார் கலைத்து விரட்டியதைத் தொடர்ந்து பதட்டம் சற்று தணிந்தது. இருப்பினும் பல்வேறு வகையான போராட்டங்களை கிராமத்தினர் தொடர்ந்து நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications