''சோனியா ஜி, கேக்கை வெட்டட்டுமா?''.. பிரதமரின் பிறந்தநாள் பார்ட்டி!

அவரது பிறந்தநாள் பார்ட்டி எப்படி இருக்கும் என்று ஒரு கற்பனை செய்தோம். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். பிரதமரை எம்எம்எஸ் என்று வைத்துக் கொள்வோம்.
டெல்லியில் உள்ள பிரதமர் வீட்டில் இரவு 7.30 மணிக்கு பார்ட்டி துவங்கிவிட்டது. அனைவரும் வந்துவிட்டனர். ஆனால் மிகவும் முக்கியமான ஆளான காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மட்டும் இன்னும் வரவில்லை. இதோ சோனியா வந்துவிட்டார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.
ஒரு மலர்கொத்தைக் கொண்டு வந்து கொடுத்து ஹலோ மன்மோகன் ஜி இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்கிறார் சோனியாஜி.
எம்எம்எஸ்: ஓ மேடம்ஜி. என் வீடு வரைக்கும் நீங்க வரணுமா? ஒரு வார்த்தை சொல்லியிருந்தா நான் ஓடோடி உங்க வீட்டுக்கு வந்திருப்பேன். அங்கேயே எனது பிறந்தநாள் பார்ட்டியை நடித்தியிருக்கலாமே.
சோனியா: நோ, நோ மன்மோகன்ஜி. இது உங்கள் பிறந்தநாள். அதனால் இதை உங்கள் வீட்டில் தான் கொண்டாட வேண்டும்.
எம்எம்எஸ்: ஓ.கே. மேடம். நீங்க சொன்னா சரி தான்.
அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்ததை அருகில் நின்று கேட்டுக் கொண்டிருந்த அத்வானி கொஞ்சம் டென்ஷனாகி கூறுகையில், மன்மோகன்ஜி, நீங்க தான் நாட்டின் பிரதமர். அப்படி இருக்கையில் உங்கள் பிறந்தநாளை கட்சி தலைவரின் வீட்டில் கொண்டாடலாம் என்று எப்படி சொல்லலாம்? ஆம்பளையா இருங்கையா. அது கெடக்கட்டும். உங்க மீது எக்கச்ச ஊழல் புகார் இருக்கு. பத்தாக்குறைக்கு மக்களுக்கு எதிராக திட்டங்களை கொண்டு வருகிறீர்கள். அதனால் நீங்கள் கண்டிப்பாக பதவி விலக வேண்டும். அதுக்கு இன்னைக்கு தான் நல்ல நாளுங்கோ.
எம்எம்எஸ்: அத்வானிஜி, என்னை முட்டாளாக்க முயற்சிக்காதீங்க. நீங்க என்னெல்லாம் செய்தீர்கள் என்று எனக்கு தெரியாதா. 1999ம் ஆண்டு தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட அப்பாவி மக்கள் உங்களாலும், உங்கள் அரசாலும் காப்பாத்த முடியல. எனக்காவது அப்படி ஏதாச்சும் பிரச்சனை வந்தா ஓடுறதுக்கு ஒரு இடம் இருக்கு. உங்க தேசிய ஐனநாயகக் கூட்டணியும் தான் ஊழல் செய்தது, மக்களுக்கு எதிராக திட்டங்களை கொண்டு வந்தது. வாஜ்பாயி இருந்ததால நீங்க தப்பிச்சீங்க. நான் உங்கள விட நேர்மையாத் தான் இருக்கேன். எனக்கு வீரமகனாகனும் என்றில்லை. ஒன்னுக்கும் உதவாத பிரதமராக இருந்தாலே போதும்.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் நடுவில் புகுந்து கூறுகையில், மன்மோகன் ஜி, நீங்க எதுக்காவது லாயக்கான பிரதமரா இருக்கிறதா நினைக்கிறீங்களா? இந்நாள் வரைக்கும் ஏதாவது சொந்தமா பேசியிருக்கீங்களா? அன்னைக்கு நாட்டு மக்களிடம் நீங்கள் டிவி மூலமாக பேசியபோது ஏதோ தூக்கத்துல உளறுன மாதிரியே இருந்துச்சு. யாராவது உங்களை சேரோட கட்டிப்போட்டு டேப் ரிக்கார்டரை ஆன் செய்துவிட்டார்களா?
எம்எம்எஸ்: நீங்க வாயை மூடிக்கிட்டு இருந்தா நல்லா இருக்கும். நானாவது மக்களோட நம்பிக்கையைப் பெற முயல்கிறேன். யாருக்கும் தெரியாம ஏதாச்சும் செஞ்சா நாட்டு மக்களின் கண்ணைப் பார்த்து பேசினால் அவர்கள் உங்களை நம்பிவிடுவார்கள் என்று மேடம் தான் சொன்னார்கள். அதனால் தான் டிவியில் பேசும்போது கண்ணைக் கூட சிமிட்டாமல் பேசினேன் தெரியுமா. நீங்க மணிக்கொருதடவ பிளேட்ட மாத்துற ஆளு. சில்லரை வர்க்கத்தில் நேரடி அன்னிய முதலீட்டில் உங்களின் தற்போதைய நிலை என்ன?
முலாயம்: ஆம்... உம்.... ர்....இல்லை இப்போதைக்கு இந்த திட்டத்தை நான் எதிர்க்கவில்லை.
எம்எம்எஸ்: அப்போ உங்க பையன் அகிலேஷ்?
முலாயம்: அவர் இதற்கு எதிராகத் தான் இருக்கார்ன்னு நினைக்கிறேன்.
எம்எம்எஸ்: நீங்க 2 பேரும் ஒரே கட்சினுல நெனச்சேன்.
அப்போது எம்எம்எஸ் அல்ல முலாயம் அழைத்து பார்ட்டிக்கு வந்த மமதா பானர்ஜி பேசுகையில், பேச்ச மாத்தாதீங்க மன்மோகன் பாபு! இந்த சில்லரை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீடெல்லாம் வேணாம்.
எம்எம்எஸ்: மமதா ஜி, உங்களை யாரு இங்க அழைச்சதாம்? நான் அனுப்பிய எஸ்எம்எஸ் வரலைன்னு தானே சொன்னீங்க. நான் அன்னைக்கே உங்கள பிறந்தநாள் பார்ட்டிகு அழைச்சேன். ஆனால் நீங்க தான் கோச்சுகிட்டு கூட்டணியில் இருந்தே விலகிட்டீங்க.
மமதா: உங்க பார்ட்டிக்கு யாரு வந்தா. நான் இன்னைக்கு முலாயமோட பார்ட்டிக்கு தான் வந்திருக்கேன். இன்னைக்கு யாரோட பிறந்தநாள் பார்ட்டி? அடப்பாவீகளா, அந்த எம்எம்எஸ் மன்மோகன் ஜியோட பிறந்தநாள் பார்ட்டி பற்றி என்று ஏன் யாருமே என்கிட்ட சொல்லல? அந்நியாயமா ரயில்வே துறையை விட்டிருக்க மாட்டேன்ல. இப்போ என் மக்களுக்கு என்ன பதில் சொல்வேன்?
பிரகாஷ் காரத்: பார்த்தீங்களா, நான் எப்பவுமே சொல்லிக்கிட்டுத் தான் இருக்கேன். இந்த மமதா எப்பப் பார்த்தாலும் ஒரே சொதப்பல். அவர் எங்களோட இடதுசாரி கொள்கையை திருவிட்டதால் இப்போ எங்களுக்கு என்ன செய்றதுன்னு தெரியல. மன்மோகன் ஜி மமதா இடத்துக்கு எங்களை எடுத்துக்கிறீகளா? 2008ல பதவி போனதுல இருந்து எங்காளுக எம்மேல கொலவெறில இருக்காங்க.
எம்எம்எஸ்: உங்ககிட்ட எத்தனை எம்.பி.க்கள் இருக்காக? சில்லரை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை ஒத்துக்குவீகளா? அதுக்கப்புறம் தான் மிச்சது.
காரத்: எத்தனை எம்.பி.க்கள் இருக்காகன்னு தெரியலை. அன்னிய முதலீடு ம்மம்... ம்...கேரளா மற்றும் மேற்கு வங்கத்தில் நிலைமையைப் பார்த்துட்டு தான் சொல்ல முடியும். என்ன யெச்சூரி, நமக்கு போதுங்கிற எம்.பி.க்கள் இருக்கால்ல?
சீதாரம் யெச்சூரி: அப்படியெல்லாம் நெனக்காதீங்கப்பு. ஆனால் மூன்றாவது அணி அமைப்போம்ணு முலாயமுக்கு வாக்கு கொடுத்திருக்கோங்கிறது நெனப்பிருக்கட்டும்.
காரத்: ஆமால்ல, சாரி மன்மோகன் ஜி. உங்களுக்கு உதவ முடியாது. நாங்க மூன்றாவது அணிக்குப் போறோம்.
எம்எம்எஸ்: ஹா ஹா ஹோ ஹோ ஹி ஹி, சிரிப்ப அடக்க முடியலைய்யா. மூன்றாவது அணி என்ன செய்யுமாம்?
முலாயம்: இதோ பாருங்க எங்கள இப்படியெல்லாம் அசிங்கப்படுத்தக் கூடாது மன்மோகன் ஜி. வேற்றுமையில் ஒற்றுமை தான் பாரதம் என்பதை எங்க மூன்றாவது அணி நிரூபிக்கும். எங்களுக்கு இடதுசாரிகள், மமதா....
மமதா: ஹோய் யாருயா அது. நாங்கள்ளாம் இடதுசாரிகூட சேர மாட்டோம். தனியாத் தான் இருப்போம். ஏன்னா எங்க வழி தனி வழி....
அத்வானி: ரொம்ப தேங்ஸ் மமதா தங்கச்சி. நீங்க இப்படியே தனியா சுத்துனாத்தான் நாங்க மேற்கு வங்கத்தில் பலம்பெற முடியும். எப்படி தனி வழி தொனி வழின்னு போன காங்கிரஸ் குட்டிசொவராப் போச்சோ அதே மாதிரி.
இதுவரை கம்முன்னு இருந்த ராகுல் காந்திக்கு கோபத்தில் மூக்கு, காது சிவந்து பேசுகையில், அத்வானிஜி பெரிய மனுசனா பேசுங்க. காங்கிரஸ பத்தி மட்டும் எதுவும் சொல்லாதீங்க. விரைவில் நான் கட்சியில் பெரி்ய்யயய பொறுப்பெடுத்து ஒரு ஓட்டிலயாவது ஜெயிக்கலாம்னு காண்பிப்போம்ல.
சோனியா: ராகுல் கண்ணு அதெல்லாம் இனிமே நடக்காதுடா. நாடு ரொம்பவே மாறிடுச்சு.
ராகுல்: அம்மா, அதெல்லாம் எனக்குத் தெரியாது. உபி, குஜராத், கர்நாடகா, மேற்கு வங்கத்துல நாம தான் ஜெயிக்கிறோம். நான் ஒரு மோடியாகணும். அவர எல்லாரும் மதிக்கிறாங்க. ஆனால் என்னப் பார்த்தா சிரிக்கிறாங்க
எம்எம்எஸ்: ராகுல் பாபா. அமைச்சரவைக்கு வந்துரு, வந்துருன்னு நானும் ரொம்ப நாளா கூப்பிடுறேன். நீ முதலில் அரசில் சேர்ந்தால் தான் மிச்சதெல்லாம் நடக்கும். எனக்கு போதும் போதும்னாச்சுப்பா அதனால் நீ பிரதமராகக் கூட ஆகலாம். என்ன சொல்றீங்க சோனியாஜி?
சோனியா (கோபத்தில்): இல்லை மன்மோகன் ஜி. மிச்ச நாளைக்கும் நீங்க தான் பிரதமர். ஓட்ட கப்பல ராகுல் தலையில கட்டிடலாம்னு பார்க்கிறீங்களா? அவன் புதுசா 2014ல பிரதமராவான். நம்மாளுங்கல்லாம் என்ன சொல்றீங்க?
சோனியா வாழ்க, மேடம் வாழ்க
அத்வானி: தோடா, 3வது வாட்டி வேற பதவிக்கு வருவோம்னு நம்புறதப் பாரு. அதெல்லாம் நடக்காது. எங்க கூட்டணியும் மீண்டும் பதவிக்கு வராது.
முலாயம் (வாயோரம் சிரிப்பு): ஹய்யா...அப்படின்னா அடுத்த பிரதமர் நான் தான். என்ன் சொல்றீங்க 3வது அணி அன்பர்களே?
காரத்: யார் ஆட்சிக்கு வந்தாலும் நாங்க 3வது அணியில் இருப்போம். அப்பப்ப ஆட்டைய கலைக்க எங்களுக்கு தெரியாது. அதெல்லாம் மமதாவுக்கு தான் கை வந்த கலை.
மமதா: வாயை மூடுங்க கோரத் பாபு! நாங்க எப்பவும் ஒரே நிலையில தான் இருக்கோம். நீங்க என்ன செஞ்சாலும் அதுக்கு நேர் எதிரா ஏதாச்சும் செய்வோம்ல.
மாயாவதி: நானும் அப்படித் தான். நான் எப்பவுமே சமாஜ்வாடிக்கு எதிராத் தான் இருப்பேன். அது சில்லரை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை ஆதரிச்சா, நான் எதிர்ப்பேன்.
ஜெயலலிதா: நானும் தான். திமுக பிரபலமாக ஒரு நாளும் விடமாட்டேன். அவர்கள் தமிழ் மக்கள் எம்மேல வைத்திருக்கிற அன்பை லவட்டப் பார்க்கிறார்கள். அதனால் மத்திய அரசு உடனே திமுகவை தடை செய்து இலங்கைக்கு விரட்டிவிட வேண்டும். ஆனால் தமிழ் மக்கள் மீதான என் பாசம் மட்டும் நிஜம். மத்தவங்க தான் இரட்டை வேஷம் போடுவாங்க...நாங்கல்லாம் அப்படியா..
டி.ஆர். பாலு: மன்மோகன்ஜி இப்படி கூப்புட்டு வைச்சு கேவலப்படுத்துறீங்களே? இப்படியே போச்சுனா நாங்கள் கூட்டணியில் இருந்து ஜகா வாங்கிடுவோம். தமிழர்களுக்கு தனி தேசம் கேட்கும் அளவுக்கு எங்க மனசு ரொம்பபபப் பெருசு தெரிஞ்சுக்கோங்க.
பிரணாப்: என்னய்யா ஒரே பேஜாரா இருக்கு. என் ஆபீஸ் டேபிள்ல இடமே இல்லை. ஒரே ராஜினாமா கடிதம், கசாப் கருணை மனு, துர்கா பூஜா அழைப்பிதழ்கள்... அதனால் தயவு செய்து யாரும் பதவி விலக வேண்டாம்னு கேட்டுக்கிறேன். முதல்ல இருக்கிறத கிளியர் பண்ணிக்கிறேன்.
எம்எம்எஸ்: சாந்தி, சாந்தி. என் பிறந்தநாளில் மக்கள் இப்படி அடிச்சுக்க வேண்டாம். சோனியா ஜி நான் நம்ம அரசின் நிலைப்பாட்டைப் பற்றி மறுபடியும்
டிவில பேசட்டுமா?
சோனியா: அய்யய்யோ.. நீங்க ஏற்கனவே பேசுனதே போதும் சாமி.
அத்வானி: ஷேம், ஷேம்
எம்எம்எஸ்: உங்க கட்சிய விடவாக்கும்.
மீரா குமார்: தயவு செய்து அனைவரும் அமருங்கள். கேக் வந்துவிட்டது. மன்மோகன்ஜி சோனியாஜியிடம் பெர்மிஷன் வாங்கி கேக்கை வெட்டவும்.
எம்எம்எஸ்: சோனியா ஜி, கேக்கை வெட்டட்டுமா?
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications