பிரதமரின் மகள் 2ம் தேதி சிதம்பரம் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

பிரதமர் மன்மோகன் சிங்கின் மகள் உபிந்தர் சிங் டெல்லி பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறை பேராசிரியராக உள்ளார். இவர் தனது கணவருடன் வரும் 2ம் தேதி சிதம்பரம் நடராஜர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மைதானத்தில் வந்திறங்க உள்ளார்.
அங்கிருந்து குண்டு துளைக்காத காரில் பலத்த பாதுகாப்புடன் நடராஜர் கோவிலுக்கு செல்ல உள்ளார். கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு டெல்லி திரும்ப உள்ளார்.
உபிந்தர் சிங்கின் வருகையை முன்னிட்டு, சிதம்பரத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ஆய்வு செய்ய டெல்லியில் இருந்து மத்திய பாதுகாப்பு படையை 5 வீரர்கள், சிதம்பரத்திற்கு நேற்று வந்தனர். அவர்கள், சிதம்பரத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, டி.எஸ்.பி. ராமலிங்கம், சிதம்பரம் தாசில்தார் தனசிங் ஆகியோரிடம் ஆலோசித்தனர்.
மேலும் அண்ணாமலை பல்கலை கழக மைதானத்தில் உள்ள ஹெலிபேட், குண்டு துளைக்காத கார் செல்லும் சாலைகள், நடராஜர் கோவில் ஆகிய இடங்களை மத்திய பாதுகாப்பு படையினர், போலீஸ் உயரதிகாரிகளுடன் சேர்ந்து ஆய்வு செய்தனர்.












Click it and Unblock the Notifications