ஷாப்பிங் கூட கூப்பிட்டுச் செல்ல மறுக்கிறாரே கணவர்.. தூக்கில் தொங்கிய பெண்!
சென்னை: கணவர் ஷாப்பிங்குக்கும், கோவிலுக்கும் கூட்டிச் செல்ல மறுத்ததற்காக ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் தனலட்சுமி. 21 வயதாகும் இவர் ஆயுதப் படை போலீஸ் ஆவார். இவருக்கும் சென்னை மாடம்பாக்கம் ஜெயலட்சுமி நகரைச் சேர்ந்த கணேசனுக்கும் திருமணம் செய்து வைத்தனர் குடும்பத்தார். கணேசனும் ஆயுதப் படை போலீஸ்காரர்தான்.
சம்பவத்தன்று கணவரை கோவிலுக்கும், ஷாப்பிங்குக்கும் கூட்டிச் செல்லுமாறு கேட்டுள்ளார் தனலட்சுமி. ஆனால் அதற்கு மறுத்துள்ளார் கணேசன். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. அதையடுத்து கோபத்தில் வீட்டை விட்டு வெளியே போய் விட்டார் கணேசன்.
சில மணி நேரம் கழித்துத் திரும்பியபோது வீடு திறந்து கிடந்தது. உள்ளே போய்ப் பார்த்த கணேசன், அங்கு படுக்கை அறை உட்பக்கமாக பூட்டியிருப்பதைக் கண்டு திடுக்கிட்டு கதவைத் தட்டினார். ஆனால் சத்தம் ஏதும் வரவில்லை.
இதையடுத்து அக்கம் பக்கத்தினரை அழைத்தார். பின்னர் கதவை உடைத்து உள்ளே போய் பார்த்தார். அங்கு மின்விசிறியில் தனலட்சுமி பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். அதைப் பார்த்து கணேசன் கதறி அழுதார். பின்னர் போலீஸாருக்குத் தகவல் போய் அவர்கள் வந்து உடலை இறக்கி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக டிஆர்ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications