ஓரினச்சேர்க்கையாளர்களுக்காக 'தாய், தந்தை'க்குத் தடைவிதிக்கும் பிரான்ஸ்!

பிரான்ஸ் நாட்டில் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணத்தை சட்டப்பூர்வமாக்க ஏதுவாக அனைத்து அதிகாரப்பூர்வ ஆவணங்களில் தந்தை மற்றும் தாய் ஆகிய வார்த்தைகளை பயன்படுத்த தடை விதிக்க அந்நாட்டு திட்டமிட்டுள்ளது. அந்த 2 வார்த்தைகளுக்கு பதிலாக பெற்றோர் என்ற வார்ததையை மட்டுமே பயன்படுத்த உள்ளனர். இது ஓரினச் சேர்க்கையாளர் திருமணங்கள் தவிர பிற திருமணங்களுக்கும் பொருந்துமாம்.
அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பான வரைவு சட்ட மசோதாவில் கூறியிருப்பதாவது, திருமணம் என்பது ஓரினம் அல்லது வெவ்வேறு இனத்தைச் சேர்ந்த 2 பேரின் சங்கம். இனி தந்தை, தாய் என்ற வார்த்தைகளை தூக்கிவிட்டு அதற்கு பதில் பெற்றோர் என்ற வார்த்தை மட்டுமே பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது என்று தி டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த புதிய சட்டத்தின்படி ஓரினச் சேர்க்கையாளர்களுக்கும் குழந்தைகளை தத்தெடுக்கும் உரிமை கொடுக்கப்படும்.
ஓரினச் சேர்க்கையாளர்களை விட ஆணும், பெண்ணும் சேர்ந்து தான் குழந்தைகளை நன்றாக வளர்க்க முடியும் என்று யார் கூறியது? என்று பிரான்ஸ்நீதி அமைச்சர் கிறிஸ்டியன் தௌபிரா கேள்வி எழுப்பியுள்ளார் என்று அந்நாட்டு பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications