''அது வேற வாயி.. இது வேற வாயி''... அன்னிய முதலீடு குறித்து 'பல்டி பாஜக' கருத்து!

ஹரியாணா மாநிலம், சூரஜ்குண்ட் நகரில் பாஜகவின் 3 நாள் தேசிய செயற்குழுக் கூட்டம் நேற்று தொடங்கியது. இதில் கட்சியின் தேசிய, மாநிலத் தலைவர்கள், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் உள்பட 300 செயற்குழு உறுப்பினர்களுடன் நாடு முழுவதிலும் இருந்து 1200 பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் பேசிய கட்காரி, சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை பாஜக கடுமையாக எதிர்க்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த முடிவை மாற்றுவோம்.
தற்போதைய சூழ்நிலையில் எந்த நேரத்திலும் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் வரலாம் என்பதால், கட்சித் தலைவர்கள் ஒற்றுமையுடன் தேர்தலை சந்திக்கத் தயாராக வேண்டும்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஒரு மூழ்கும் கப்பல்'. நாட்டு மக்கள் மத்திய அரசு மீது நம்பிக்கை இழந்து விட்டனர் என்றார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத், சில்லறை வர்த்தகத்தில் 51 சதவீத அன்னிய முதலீட்டை அனுமதிப்பது என்பது நாட்டின் நலன்களுக்கோ, நமது விவசாய சமூகத்துக்கோ உகந்தது அல்ல என்பதே பாஜகவின் கருத்தாகும் என்றார்.
அவரிடம், 2004ம் ஆண்டில் பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 26 சதவீத அன்னிய முதலீட்டை ஆதரிப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்ததே என்று கேட்டதற்கு, அது 8 ஆண்டுகளுக்கு முன் நடந்தது. எங்கள் கட்சியின் புதிய தேர்தல் அறிக்கை வரும் வரை பொறுத்திருங்கள். அதில் இவ்விவகாரம் குறித்து விரிவாக விளக்குவோம் என்றார்.
ஆனால், பாஜக கூட்டணியில் உள்ள சிரோமணி அகாலி தளம் கட்சி அன்னிய முதலீட்டை ஆதரித்துள்ளதே என்று கேட்டதற்கு, இது தொடர்பாக, பஞ்சாப் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதலுடன் தொடர்ந்து பேசுவோம். அவருடன் ஏற்கெனவே பேசியுள்ளோம். எங்களிடையே எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை என்றார் ரவிசங்கர் பிரசாத்.
ஆனால், யாரும் நினைத்த மாதிரியெல்லாம் அன்னிய முதலீடு தொடர்பான முடிவுகளை வாபஸ் பெற்றுவிட முடியாது என்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா கூறியுள்ளார். இது தொடர்பாக சர்வதேச நிறுவனங்கள், நாடுகளுடன் இந்தியா கையெழுத்திடும் ஒப்பந்தங்களை யார் ஆட்சிக்கு வந்தாலும் ரத்து செய்துவிட முடியாது. நாட்டுக்குள் முதலீடுகள் வந்துவிடக் கூடாது என்பதைத் தடுக்கவும், முதலீட்டாளர்களை மிரட்டவுமே பாஜக இவ்வாறு பேசுகிறது.
2004ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் இதே பாஜக சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்போம் என்று கூறியதே. அது ஏன் என்றார் சர்மா.
இந் நிலையில், அன்னிய முதலீடுகளை அனுமதிப்பதை ரத்து செய்வோம் என்ற பாஜகவின் கருத்துக் குறித்து நாட்டின் முக்கிய தொழிலபதிபர்கள் யாருமே கருத்துத் தெரிவிக்க மறுத்து வருகின்றனர்.
இவர்கள் செய்வது தான் உண்மையான பாலிடிக்ஸ்!
-
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது? -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications