ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு ஆவணங்களைப் பார்வையிட சுப்ரீம் கோர்ட் அனுமதி

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு பெங்களூர் தனிநீதிமன்றத்தில் பெரும் இழுத்தடிப்புகளுக்கு மத்தியில் நகர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த இழுத்தடிப்பு யுக்தியின் ஒருபகுதியான வழக்கின் ஆவணங்களைப் பார்வையிட அனுமதி கோரி சசிகலா மனுத்தாக்கல் செய்தார். தள்ளுபடிகளைத் தாண்டி தற்போது உச்சநீதிமன்றத்துக்கு வந்தது.
சசிகலாவின் மனுவை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் சதாசிவம், ரஞ்சன் கோகெய் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஆவணங்களைப் பாவையிட அனுமதி கொடுத்தார். இதேபோல் தேவைப்பட்டால் இளவரசி, சுதாகரனும் ஆவணங்களைப் பார்வையிடலாம். அதே நேரத்தில் 21 நாட்களுக்குள் ஆவணங்களைப் பார்வையிட்டு திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று தங்களது உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
எப்படியெல்லாம் இழுத்தடிப்போம்னு உங்களுக்கெல்லாம் தெரியாது என்கிறது சசிகலா தரப்பு!












Click it and Unblock the Notifications