பாஜகவுக்கு போட்டியாக 'கஜக'.. தேசிய செயற்குழு கூட்டத்தை புறக்கணித்த எதியூரப்பா முடிவு!

இக் கூட்டத்தில் கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டார், துணை முதல்வர் ஈஸ்வரப்பா, அமைச்சர்கள் சுரேஷ்குமார், கோவிந்த கர்ஜோல் ஆகியோர் பங்கேற்றனர்.
ஆனால், எதியூரப்பா இந்த கூட்டத்துக்கு செல்லவில்லை. அவர் பெங்களூர் கனகபுரா ரோட்டில் உள்ள ரவிசங்கரின் ஆசிரமத்திற்கு சென்று அங்கேயே தங்கிவிட்டார்.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள எதியூரப்பாவுக்கு முறையாக அழைப்பு விடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களாக எதியூரப்பா கட்சிக்கு விரோதமாக பேசி வருவதால் தேசிய தலைவர்கள் அவர் மீது கடும் அதிருப்தியில் உள்ளதாகவும், அதனால் தான் அவருக்கு அழைப்பு விடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
கட்சியின் மாநிலத் தலைவர் பதவியை எதிர்பார்க்கும் எதியூரப்பா தனக்கு தலைவர் பதவியை வழங்காவிட்டால் கட்சியை விட்டு விலகவும் எதியூரப்பா திட்டமிட்டுள்ளார்.
ஹரியாணாவில் 3 நாட்கள் நடைபெறும் பாஜக கூட்டத்தில் கர்நாடக மாநில தலைவர் பதவி யாருக்கு என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.
அவ்வாறு அறிவிப்பு வெளியாகி, தனக்கு பதவி கிடைக்காத பட்சத்தில் எதியூரப்பா தனது ஆதரவாளர்களுடன் பாஜகவை விட்டு விலகுவார் என்றும் கூறப்படுகிறது.
எதியூரப்பா பரபரப்பு பேட்டி:
இந் நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு எதியூரப்பா அளித்த பேட்டியில், மக்கள் எந்த வழியை காட்டுகிறார்களோ அந்த வழியில் நான் செல்வேன். நான் கடந்த 40 ஆண்டுகளாக கற்கள், முட்கள் நிறைந்த பாதையில் தான் நடந்து வந்துள்ளேன். என் தலைமையில் தேர்தலை சந்தித்து இந்த ஆட்சி அமைந்தது.
கர்நாடகத்தின் நிலம், நீர், மொழி ஆகியவற்றை காக்க நான் போராடி வருகிறேன். தொடர்ந்து போராடுவேன்.
கட்சியை விட எனக்கு மக்களின் நலன் தான் முக்கியம். 40 ஆண்டுகள் கஷ்டப்பட்டு கட்சியை வளர்த்தேன். எனக்கு எதிரிகள் கட்சியில் தான் உள்ளனர். முதல்வர் பதவியில் இருந்து சதிசெய்து என்னை கீழே இறக்கினார்கள்.
எதற்காக அந்த பதவியில் இருந்து என்னை இறக்கினார்கள் என்று எங்கள் கட்சி தலைவர்கள் யாரும் விளக்கம் சொல்லவில்லை.
நாடாளுமன்றத்தில் என் பெயரை சொல்லி காங்கிரஸ் கட்சியினர் பேசும்போதெல்லாம் எங்கள் கட்சியை
சேர்ந்த எம்.பிக்கள் வாய்மூடி அமைதியாக உட்கார்ந்துள்ளனர். புள்ளி விவரங்களை எடுத்து சொல்லியிருக்க வேண்டியது தானே?. ஏன் அதை செய்யவில்லை?.
சட்டவிரோத சுரங்க முறைகேடு மூலம் பாஜகவின் மேலிட தலைவர்களுக்கு பங்கு போய் இருந்தால் அதுபற்றியும் விசாரணை நடத்தட்டும். தவறு நடந்திருந்தால் அது பகிரங்கமாகும் அல்லவா?.
வரும் டிசம்பர் மாதம் வரை மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து மக்களின் கருத்துகளை கேட்பேன். அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதன்படி அடுத்தகட்டமாக முடிவு எடுப்பேன். இப்போதைக்கு பாஜகவில் தான் இருக்கிறேன். கட்சியில் இருப்பதா? வேண்டாமா? என்பது குறித்து டிசம்பர் மாதம் இறுதி முடிவு எடுப்பேன் என்றார்.
இந் நிலையில் கர்நாடக ஜனதா கட்சி (Karnataka Janata Party-KJP) என்ற பெயரில் கட்சியைத் தொடங்க எதியூரப்பா தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.
சுஷ்மா சுவராஜும் பங்கேற்கவில்லை..
அதே போல நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜும் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள சுஷ்மா, டெல்லியில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
அடித்து தூக்கும் மம்தா.. அதிர்ச்சியில் பாஜக! மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணாமுல் தான்! புதிய சர்வே -
புதுச்சேரி குறித்து பக்கம் பக்கமாக புகார்.. தமிழக அரசியல் குறித்து கப்சிப்.. அண்ணாமலைக்கு வந்த சோதனை -
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்! -
மொடக்குறிச்சி, திருப்பூர் தெற்கு செட் ஆகாது.. கோவையில் 1 தொகுதியை ஒதுக்குங்க.. அண்ணாமலை பிடிவாதம்! -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
Vijay: விஜய் கனவுலகில் இருக்காரு.. தமிழ்நாடு பற்றி ஒன்னுமே தெரியலை.. பியூஷ் கோயல் அட்டாக்! -
பாஜக vs காங்கிரஸ்! நேருக்கு நேர் மோதலில் மோடி க்ளீன் ஸ்வீப்.. பரிதாபமான நிலையில் ராகுல்! புதிய சர்வே -
என்னது பி டீமா.. ஏ டீம் யாருன்னு தெரியுமா.. ஆவேசமான சீமான்.. விஜயையும் சும்மா விடலையே -
"தமிழகத்தில் முஸ்லீம்களுக்கு தான் ஓபிசி இட ஒதுக்கீடு கிடைக்கிறது.." பாஜக எம்பி குற்றச்சாட்டு -
பாஜகவில் இணைந்தார் முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ்! மேற்கு வங்க தேர்தலில் போட்டியிட வாய்ப்பு -
யாரு? எங்க? பாஜகவில் பரபர பஞ்சாயத்து! அதிமுகவால் கடுப்பான டெல்லி! மொடக்குறிச்சியில் அண்ணாமலை போட்டி?












Click it and Unblock the Notifications