Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜகவுக்கு போட்டியாக 'கஜக'.. தேசிய செயற்குழு கூட்டத்தை புறக்கணித்த எதியூரப்பா முடிவு!

Subscribe to Oneindia Tamil

BS Yeddyurappa
பெங்களூர்: ஹரியாணா மாநிலத்தில் நடந்து வரும் பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தை கர்நாடக மூத்த பாஜக தலைவரும் முன்னாள் முதல்வருமான எதியூரப்பா புறக்கணித்துவிட்டார். அதே போல இன்று நடக்கும் தேசிய கவுன்சில் கூட்டத்தையும் அவர் புறக்கணிக்கவுள்ளார்.

இக் கூட்டத்தில் கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டார், துணை முதல்வர் ஈஸ்வரப்பா, அமைச்சர்கள் சுரேஷ்குமார், கோவிந்த கர்ஜோல் ஆகியோர் பங்கேற்றனர்.

ஆனால், எதியூரப்பா இந்த கூட்டத்துக்கு செல்லவில்லை. அவர் பெங்களூர் கனகபுரா ரோட்டில் உள்ள ரவிசங்கரின் ஆசிரமத்திற்கு சென்று அங்கேயே தங்கிவிட்டார்.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள எதியூரப்பாவுக்கு முறையாக அழைப்பு விடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களாக எதியூரப்பா கட்சிக்கு விரோதமாக பேசி வருவதால் தேசிய தலைவர்கள் அவர் மீது கடும் அதிருப்தியில் உள்ளதாகவும், அதனால் தான் அவருக்கு அழைப்பு விடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

கட்சியின் மாநிலத் தலைவர் பதவியை எதிர்பார்க்கும் எதியூரப்பா தனக்கு தலைவர் பதவியை வழங்காவிட்டால் கட்சியை விட்டு விலகவும் எதியூரப்பா திட்டமிட்டுள்ளார்.

ஹரியாணாவில் 3 நாட்கள் நடைபெறும் பாஜக கூட்டத்தில் கர்நாடக மாநில தலைவர் பதவி யாருக்கு என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.
அவ்வாறு அறிவிப்பு வெளியாகி, தனக்கு பதவி கிடைக்காத பட்சத்தில் எதியூரப்பா தனது ஆதரவாளர்களுடன் பாஜகவை விட்டு விலகுவார் என்றும் கூறப்படுகிறது.

எதியூரப்பா பரபரப்பு பேட்டி:

இந் நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு எதியூரப்பா அளித்த பேட்டியில், மக்கள் எந்த வழியை காட்டுகிறார்களோ அந்த வழியில் நான் செல்வேன். நான் கடந்த 40 ஆண்டுகளாக கற்கள், முட்கள் நிறைந்த பாதையில் தான் நடந்து வந்துள்ளேன். என் தலைமையில் தேர்தலை சந்தித்து இந்த ஆட்சி அமைந்தது.

கர்நாடகத்தின் நிலம், நீர், மொழி ஆகியவற்றை காக்க நான் போராடி வருகிறேன். தொடர்ந்து போராடுவேன்.

கட்சியை விட எனக்கு மக்களின் நலன் தான் முக்கியம். 40 ஆண்டுகள் கஷ்டப்பட்டு கட்சியை வளர்த்தேன். எனக்கு எதிரிகள் கட்சியில் தான் உள்ளனர். முதல்வர் பதவியில் இருந்து சதிசெய்து என்னை கீழே இறக்கினார்கள்.

எதற்காக அந்த பதவியில் இருந்து என்னை இறக்கினார்கள் என்று எங்கள் கட்சி தலைவர்கள் யாரும் விளக்கம் சொல்லவில்லை.

நாடாளுமன்றத்தில் என் பெயரை சொல்லி காங்கிரஸ் கட்சியினர் பேசும்போதெல்லாம் எங்கள் கட்சியை
சேர்ந்த எம்.பிக்கள் வாய்மூடி அமைதியாக உட்கார்ந்துள்ளனர். புள்ளி விவரங்களை எடுத்து சொல்லியிருக்க வேண்டியது தானே?. ஏன் அதை செய்யவில்லை?.

சட்டவிரோத சுரங்க முறைகேடு மூலம் பாஜகவின் மேலிட தலைவர்களுக்கு பங்கு போய் இருந்தால் அதுபற்றியும் விசாரணை நடத்தட்டும். தவறு நடந்திருந்தால் அது பகிரங்கமாகும் அல்லவா?.

வரும் டிசம்பர் மாதம் வரை மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து மக்களின் கருத்துகளை கேட்பேன். அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதன்படி அடுத்தகட்டமாக முடிவு எடுப்பேன். இப்போதைக்கு பாஜகவில் தான் இருக்கிறேன். கட்சியில் இருப்பதா? வேண்டாமா? என்பது குறித்து டிசம்பர் மாதம் இறுதி முடிவு எடுப்பேன் என்றார்.

இந் நிலையில் கர்நாடக ஜனதா கட்சி (Karnataka Janata Party-KJP) என்ற பெயரில் கட்சியைத் தொடங்க எதியூரப்பா தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.

சுஷ்மா சுவராஜும் பங்கேற்கவில்லை..

அதே போல நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜும் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள சுஷ்மா, டெல்லியில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+