டிஎன்பிஎஸ்சி மூலம் இதுவரை 43 லட்சம் பேருக்கு வேலை: நட்ராஜ்
சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக இதுவரை 43 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளதாக தேர்வாணய தலைவர் நட்ராஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய(டி.என்.பி.எஸ்.சி.) தலைவர் நட்ராஜ் கூறுகையில்,
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் இதுவரை 43 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் இந்த அளவுக்கு அரசு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. வரும் 30ம் தேதி நடக்கும் கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கு சுமார் 9 லட்சத்து 50,000 பேர் விண்ணப்பி்த்துள்ளனர். இந்த தேர்வுக்காக மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தற்போது தற்காலிகமாக சென்னை, கிரீம்ஸ் சாலையில் உள்ள வணிகவரித்துறை இணைப்புக் கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தேர்வாணையத்திற்கு என்று ரூ.19.86 கோடி செலவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் பாரிமுனை பேருந்து நிலையம் அருகே உள்ள வஉசி நகர், ப்ரேஸர் பாலச் சாலையில் 1,25,000 சதுர அடி பரப்பளவில் 6 மாடி புதுக்கட்டிடம் கட்டப்பட்டது.
இந்த புதிய கட்டிடத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று திறந்து வைத்தார். புதிய கட்டிடத்தின் 6வது மாடியில் உள்ள நவீன வசதிகளுடன் கூடிய மாநாட்டுக் கூடத்தை அவர் பார்வையிட்டார். இக்கட்டிடத்தில் ஒலி-ஒளி காட்சி அமைப்பு வசதி, காணொலிக் காட்சி, 2 மாநாட்டுக் கூடங்கள், இணையவழித் தேர்வுக்கூடம், நவீன வசதிகளுடன் கூடிய நேர்காணல் அறைகள், தகவல் மற்றும் குறைதீர் மையம், அனைத்து பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய மதிப்பீட்டு அறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல்












Click it and Unblock the Notifications