வீரப்பனை வீழ்த்திய கதை... ஒரு உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்!

கோவை மாவட்டம் எஸ்.பி. அலுவலகத்தில் இளநிலைப் பணியாளராக பணிபுரியும் திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டையைச் சேர்ந்த சையத் ஷானாவாஸ் இது தொடர்பாக கூறியுள்ளதாவது:
நான் 10-ம் வகுப்பு முடித்த உடன் எங்கள் பகுதி போலீஸ் நண்பனாக இருந்தேன். உடுமலைப்பேட்டையில் பணிபுரிந்த போலீசார் வின்சென்ட், வீரப்பன் வேட்டைக்காக அதிரடிப்படைக்கு மாற்றப்பட்டார். அவருடன் நான் தொடர்பில் இருந்தேன். கோவை சிறையில் இருத வீரப்பன் அண்ணன் மாதையனை சந்திக்க கனகராஜ் என்பவர் அடிக்கடி வந்து செல்வார். அவர் அதிரடிப்படையால் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்.
தீவிரவாதிகளாக உளவாளிகள்
அவர் கோவை சிறைக்கு வந்தபோது அவரிடம் ஒரு கடிதத்தை போலீஸ் கைப்பற்றியது. அந்தக் கடிதத்தில் சிறையில் உள்ள முஸ்லிம் அமைப்பினர் மூலம் ஆயுதங்களைத் திரட்டுமாறு மாதையனுக்கு வீரப்பன் கோரியிருந்தார். இந்தக் கடிதம்தான் வீரப்பன் உயிருக்கே உலை வைத்தது. இந்தக் கடிதம் அதிரடிப்படை எஸ்.பி.யாக இருந்த செந்தாமரைக் கண்ணனிடம் ஒப்படைக்கப்படது.
வீரப்பன் தெரிவித்திருந்த யோசனைப்படி 4 முஸ்லிம் இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டோம். நான், கன்னியாகுமரியைச் சேர்ந்த அனஸ்கான், உபயத்துல்லா, உடுமலைப்பேட்டையை சேர்ந்த ஜியாவுல் ஹக் ஆகியோர் இந்த உளவு வேலைக்கு தேர்வானவர்கள். எங்களுக்கு 3 மாதங்கள் ஆயுத பயிற்சி கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் வீரப்பனிடம் போய் தீவிரவாதிகளாக நடந்து கொண்டு தகவல்களை சேகரிக்க சொன்னார்கள். நான் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஒரு காவல்துறை உயர் அதிகாரியிடம் அறிமுகப்படுத்தப்பட்டேன். உளவு வேலையை சரியாக செய்தால் ரூ50 லட்சம் தருவதாக சொன்னார்கள்.
பிணைக் கைதியாக வீரப்பன் உறவினர் மகன்
பின்னர் வீரப்பன் உறவினரான கனகராஜிடம் விவரத்தை சொல்லி வீரப்பனிடம் கொண்டு சேர்க்கக் கூறினார். ஆனால் அவர் மறுத்துவிட்டார். இதனால் வீரப்பன் மகனை பிணையாக வைத்துக் கொண்டு எங்களை வீரப்பனிட சேர்க்காவிட்டால் கொன்றுவிடுவேன் என்ற் மிரட்டி ஒப்புக் கொள்ள வைத்தார்.
2003-ம் ஆண்டு கனகராஜ் மூலம் வீரப்பனிடம் சேர்ந்தோம். மொத்தம் 20 நாட்கள் வீரப்பனிடம் தீவிரவாதிகளாக நடித்தே உளவு பார்த்தோம். வீரப்பனின் பலவீனங்கள், திட்டங்களை போலீசிடம் சொன்னோம். நாங்கள் சொன்ன தகவலை வைத்துதான் சிலர் பொடா சட்டத்தில் சிக்கினர். இந்த ஆபரேஷனுக்குப் பெயர் ககூன் (பட்டுக்கூடு). இந்த ஆப்பரேஷனை வைத்தே வீரப்பன் கொலை செய்யப்பட்டார். கடந்த 2004-ம் ஆண்டு எங்களது பெயரை சொல்லாமல் ஜூனியர் விகடனுக்கு எஸ்.பி.யாக இருந்த செந்தாமரைக் கண்ணன் கூறியும் இருந்தார். ஆனால் எனக்கு சேர வேண்டிய தொகை கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார்.
இது பற்றி காவல்துறை அதிகாரி செந்தாமரைக் கண்ணன் கூறுகையில், ''நாங்கள் நால்வரையும் பயன்படுத்தியது உண்மைதான். ஆனால், 50 லட்சம் ரூபாய் தருகிறோம் என்று எப்போதும் வாக்குறுதி கொடுக்கவில்லை. வேலை வாய்ப்புக்கு உறுதி கொடுத்திருந்தோம். அதை செய்து கொடுத்திருக்கிறோம்'' என்று சொல்லியிருக்கிறார் என்று ஜூனியர் விகடன் பதிவு செய்திருக்கிறது.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications