அண்ணா வளைவு அகற்றும் தீர்மானம்.. வெட்கமா இருக்கு- தலையிலடிக்கும் சென்னை மேயர் துரைசாமி
சென்னை: சென்னை அண்ணா நகர் அண்ணா வளைவை அகற்றுவதற்காக சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்காக தாம் வெட்கப்படுவதாகவும் வேதனைப்படுவதாகவும் மேயர் சைதை துரைசாமி கூறியுள்ளார்.
சென்னை மாநகராட்சி மன்றக் கூடத்தில் அண்ணா வளைவை இடிக்க வழங்கிய அனுமதி ரத்து செய்து அண்ணா வளைவை புதுப்பிக்கும் தீர்மானம் நேற்று கொண்டுவரப்பட்டது.
திமுகவோட சதி
தீர்மானத்தின் மீது மேயர் சைதை துரைசாமி பேசியதாவது:
அண்ணா வளைவை அகற்றும் திட்டம் கடந்த ஆட்சியின்போது கொண்டு வரப்பட்டது. அந்த திட்டத்தில்தான் எம்.ஜி.ஆரால் திறந்து வைக்கப்பட்ட அண்ணா வளைவை அகற்ற மறைமுகமாக சதி செய்து இருக்கின்றனர். இதில் முந்தைய ஆட்சியாளர்களின் சதி இருப்பதே முதல்வர் ஆய்வு நடத்தியபோதுதான் கண்டுபிடிக்கப்பட்டது.
அண்ணா வளைவை அப்புறப்படுத்தும் தீர்மானத்தை சென்னை மாநகராட்சி நிறைவேற்றியதற்காக நான் வெட்கப்படுகிறேன், வேதனைப்படுகிறேன். அனைவரும் வருந்துகிறோம். அண்ணா வளைவை அகற்ற அளிக்கப்பட்ட அனுமதி தீர்மானத்தை ரத்து செய்கிறோம். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். திறந்து வைத்த அண்ணா வளைவை நெடுஞ்சாலைத்துறை புதுப்பித்து வழங்கும் என்றார் அவர்,












Click it and Unblock the Notifications