நீண்டகால காத்திருப்பில் இருந்த விருதுநகர் ஆட்சியர் பாலாஜிக்கு திட்டக் குழு உறுப்பினர் பொறுப்பு

அப்படி என்ன தப்பு செய்தார்?
விருதுநகரில் ஆக்கிரமிப்புகளை எதிர்ப்புகளை மீறி அகற்றினார், புதிய பேருந்து நிலையத்தை முழுமையாக செயல்படுத்தினார், அரசின் நலத்திட்டங்கள் பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்தார், மோசடி செய்யும் ஊராட்சித் தலைவர்களை நீக்கினார், ஒழுங்காக வேலை செய்ய அதிகாரிகளை கட்டாயப்படுத்தினார், சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் தேர்வில் அரசியல்வாதிகளின் பரிந்துரைகளை ஏற்க மறுத்தார். மதுரையில் எப்படி மக்கள் நலனுக்காக ஆட்சியராக இருந்த சகாயம் ஆர்வம் காட்டினாரோ அதேபோல்தான் பாலாஜியும் இயங்கினார். அதனால் அவருக்கு "விருதுநகர் சகாயம்" என்றும் பட்டம் சூட்டப்பட்டது. ஆனால் மக்கள் நலன் என்ற "மாபெரும் குற்றங்களை" செய்ததற்காக அவர் மாற்றப்பட்டு நீண்டகாலம் காத்திருப்பில் வைக்கப்பட்டிருந்தார்.
தற்போது விருதுநகர் மாவட்ட ஆட்சியராக இருந்த பாலாஜி மாநில திட்டக் குழு உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications