நீண்டகால காத்திருப்பில் இருந்த விருதுநகர் ஆட்சியர் பாலாஜிக்கு திட்டக் குழு உறுப்பினர் பொறுப்பு

Subscribe to Oneindia Tamil

Virudhunagar Collector Balaji
சென்னை: மக்கள் நலனுக்காகப் பாடுபடும் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு என்ன பரிசு கிடைக்குமோ அதுதான் விருதுநகர் மாவட்ட ஆட்சியராக இருந்த பாலாஜிக்கு கிடைத்தது! ஆம் விறுவிறுவென அதிரடி நடவடிக்கைளில் ஈடுபட்டு வந்த பாலஜி சட்டென தூக்கியடிக்கப்பட்டு காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியையே ஏற்படுத்தியது! இன்றைய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றத்தில் இந்தக் காத்திருப்பு வனவாசம் முடிவுக்கு வந்துள்ளது.

அப்படி என்ன தப்பு செய்தார்?

விருதுநகரில் ஆக்கிரமிப்புகளை எதிர்ப்புகளை மீறி அகற்றினார், புதிய பேருந்து நிலையத்தை முழுமையாக செயல்படுத்தினார், அரசின் நலத்திட்டங்கள் பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்தார், மோசடி செய்யும் ஊராட்சித் தலைவர்களை நீக்கினார், ஒழுங்காக வேலை செய்ய அதிகாரிகளை கட்டாயப்படுத்தினார், சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் தேர்வில் அரசியல்வாதிகளின் பரிந்துரைகளை ஏற்க மறுத்தார். மதுரையில் எப்படி மக்கள் நலனுக்காக ஆட்சியராக இருந்த சகாயம் ஆர்வம் காட்டினாரோ அதேபோல்தான் பாலாஜியும் இயங்கினார். அதனால் அவருக்கு "விருதுநகர் சகாயம்" என்றும் பட்டம் சூட்டப்பட்டது. ஆனால் மக்கள் நலன் என்ற "மாபெரும் குற்றங்களை" செய்ததற்காக அவர் மாற்றப்பட்டு நீண்டகாலம் காத்திருப்பில் வைக்கப்பட்டிருந்தார்.

தற்போது விருதுநகர் மாவட்ட ஆட்சியராக இருந்த பாலாஜி மாநில திட்டக் குழு உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+