எழுத்தாளர்கள் விக்கிரமன், பொன்னீலனுக்கு ரூ. 2.5 லட்சம் இலக்கியப் பரிசு .. தினத்தந்தி வழங்குகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: தினத்தந்தி நிறுவனர் சி.பா. ஆதித்தனார் 108வது பிறந்த நாளையொட்டி 2 மூத்த தமிழறிஞர்களுக்கு நினைவு இலக்கியப் பரிசு வழங்கப்படுகிறது.

தினத்தந்தி நிறுவனர் 'தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனார் நினைவாக, ஆண்டுதோறும் அவருடைய பிறந்த நாளையொட்டி ரூ.2.5 லட்சம் இலக்கியப்பரிசு வழங்கப்படுகிறது. இதன்படி, மூத்த தமிழறிஞருக்கு ரூ.1.5 லட்சமும், சிறந்த இலக்கிய நூலுக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு பரிசு பெறுவோர் விவரங்களை, 'தினத்தந்தி' இயக்குனர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன் அறிவித்துள்ளார். சி.பா.ஆதித்தனார் மூத்த தமிழறிஞர் விருது, விக்கிரமனுக்கு வழங்கப்படுகிறது. அவருக்கு வெள்ளிப்பட்டயத்துடன் ரூ.1.5 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்படுகிறது..

இந்த ஆண்டுக்கான 'சி.பா.ஆதித்தனார் இலக்கியப் பரிசு', எழுத்தாளர் பொன்னீலனுக்கு வழங்கப்படுகிறது. அவருடைய மறுபக்கம் என்ற நூலுக்கு தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் இலக்கியப்பரிசு (ரூ.1 லட்சம்) வழங்கப்படுகிறது.

நாளை வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு சென்னை அண்ணாசாலையில் உள்ள ராணி சீதை மன்றத்தில் சி.பா.ஆதித்தனாரின் 108-வது பிறந்த நாள் இலக்கிய பரிசளிப்பு விழா நடைபெறுகிறது. மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் கல்யாணி மதிவாணன் விழாவுக்கு தலைமை தாங்கி, விருதுகளை வழங்குகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+