துரைதயாநிதி தலைமறைவு: மு.க.அழகிரி உறவினர்களிடம் போலீஸ் விசாரணை

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் கிரானைட் முறைகேடு தொடர்பாக பி.ஆர்.பி. கிரானைட், மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரைதயாநிதி பங்குதாரராக இருந்த ஒலிம்பஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் மீது வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
இதில் பிஆர்பி கிரானைட் உரிமையாளர் பழனிச்சாமி, இதில் ஒலிம்பஸ் நிறுவனப் பங்குதாரர்கள் மற்றும் அதன் காசாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால், துரை தயாநிதி தலைமறைவாகிவிட்டார். அவரது முன்ஜாமீன் மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துவிட்டது. இதையடுத்து துரையை கைது செய்ய மதுரை எஸ்பி பாலகிருஷ்ணன் 10 தனிப்படைகள் அமைத்துள்ளார்.
துரை வெளிநாடுகளுக்குத் தப்பி விடாமலிருக்க விமான நிலையங்களுக்கும் போலீஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டள்ளது.
இந் நிலையில் துரை தயாநிதியின் இருப்பிடம் குறித்து அறிய அழகிரியின் மகளின் கணவரின் சகோதரர் தீபக், அவரது தந்தை ரத்தினவேல் ஆகியோரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
முன்னதாக மதுரை நாகமலைப் புதுக்கோட்டையை சேர்ந்த சீனிவாசன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பொட்டு சுரேஷ் உள்பட பலரது வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இங்கும் துரை இல்லாததால் அண்ணாநகர், வில்லாபுரம், கரிமேடு உள்பட பல இடங்களில் வசித்து வரும் முக்கிய திமுக பிரமுகர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. ஆனாலும் துரை தயாநிதி சிக்கவில்லை.
கொடைக்கானலில் உள்ள அழகிரியின் பங்களாவில் பதுங்கி இருக்கலாம் என்ற தகவலின் அடிப்படையில் ஒரு தனிப்படை போலீசார் அங்கு சென்றது. ஆனால், அவர் அங்கும் இல்லை.
இது குறித்து எஸ்.பி. பாலகிருஷ்ணன் கூறுகையில், துரைதயாநிதி இருப்பிடம் குறித்து அவரது உறவினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். இதுவரை அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. துரை தயாநிதியின் நண்பர்களை அழைத்து சென்று விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்.
மத்திய அமைச்சர் மு.க.அழகிரி வீட்டில் துரை தயாநிதி இருப்பதாக உறுதியான தகவல் கிடைத்தால் அவரது வீட்டிற்கும் சென்று சோதனை நடத்தி விசாரிக்கப்படும் என்றார்.
முதலில் திமுகவினர், அடுத்ததாக உறவினர்கள் என்று போலீசார் தங்களது விசாரணை வளையத்தை நெருக்கி வருகின்றனர். துரையின் தங்கையின் கணவர் குடும்பத்துக்கே பிரச்சனை தரப்படுவதால் துரை விரைவில் தானே சரண்டராவார் என்று போலீசார் கருதுகின்றனர்.
பிஆர்பி மகன்களும் 'எஸ்':
இந் நிலையில் கிரானைட் முதலை பி.ஆர்.பழனிச்சாமியின் மகன்கள் செந்தில்குமார், சுரேஷ்குமார் உள்பட தலைமறைவாக இருப்பவர்களை பிடிக்க மற்றொரு தனிப்படை பெங்களூருக்கு விரைந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications