பிரச்சனைக்கு 'தீர்வு' காண வந்த அருண் ஜேட்லி.. சந்திக்காமல் ஊருக்குப் போய்விட்ட எதியூரப்பா!

எதியூரப்பாவுக்குப் பதிலாக அவரது ஆதரவு அமைச்சர்களான பசவராஜ் பொம்மை, ஷோபா கராந்லாஜே ஆகியோர் மட்டுமே அருண் ஜேட்லியை சந்தித்தனர். அப்போது எதியூரப்பாவுக்கு மாநில பாஜக தலைவர் பதவியை தந்தே ஆக வேண்டும் என்று வலியுறுத்தினர்.
தனக்கு முதல்வர் பதவியை மீண்டும் தர வேண்டும் என்று கலாட்டா செய்த எதியூரப்பாவை சமாதானம் செய்ய முதல்வர் சதானந்த கெளடாவை மாற்றிவிட்டு எதியூரப்பா ஆதரவாளரான ஜெகதீஷ் ஷெட்டரை முதல்ரவாக்கியது பாஜக தலைமை.
இந் நிலையில் தனக்கு பாஜக மாநிலத் தலைவர் பதவியைத் தர வேண்டும், இல்லாவிட்டால் கட்சியை விட்டு விலகுவேன் என்று மிரட்டி வருகிறார் எதியூரப்பா.
ஆனால், இதைத் தர பாஜக தலைமை தயாராக இல்லை. இந் நிலையில் எதியூரப்பா விவகாரம் குறித்துப் பேச அருண் ஜேட்லி பெங்களூர் வந்தார்.
முதல்வர் ஜெகதீஷ் ஷெடடார், துணை முதல்வர்கள் ஈஸ்வரப்பா, அசோக் மற்றும் அமைச்சர்களுடன் எதியூரப்பாவுக்கு கட்சித் தலைவர் பதவி வழங்குவது குறித்தும், அவர் கட்சியை விட்டு விலகினால் ஏற்படும் சாதக- பாதகங்கள் குறித்தும் கருத்துகளை கேட்டறிந்தார்.
எதியூரப்பா போனாலும் பரவாயில்லை, கட்சித் தலைவர் பதவியை அவருக்குத் தரக் கூடாது என்று இப்போதைய மாநிலத் தலைவரான ஈஸ்வரப்பா கூறினார்.
ஆனால், எதியூரப்பா போனால் பாஜகவும் காலியாகிவிடும் என்று முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டார் கூறியதாகத் தெரிகிறது.
அதே போல கட்சியின் தேசியச் செயலாளரும் எதியூரப்பாவின் முக்கிய எதிரியுமான அனந்தகுமார் எம்.பியும் அருண் ஜேட்லியை சந்தித்தார். அவர் தனது ஆதரவாளரான பிரகலாத் ஜோஷியை மாநிலத் தலைவராக்கக் கோரியதாகத் தெரிகிகது.
ஆனால், ஜோஷி தலைவரானால் கட்சியை உடைப்பேன் என்று எதியூரப்பா தரப்பு மிரட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது.
அருண் ஜேட்லியை எதியூரப்பாவும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஷோபா, பசவராஜ் ஆகியோரை மட்டும் அனுப்பி வைத்த எதியூரப்பா தனது ஆதரவாளர்களான பிற அமைச்சர்கள் யாரையும் அருண் ஜேட்லியை சந்திக்க விடவில்லை.
இதையடுத்து எதியூரப்பாவை விரைவில் டெல்லிக்கு அழைக்த்து கட்சித் தலைவர் பதவி வழங்குவது குறித்து அவருடன் விவாதிக்க கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அருண் ஜேட்லியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அவர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
முன்னதாக ஜேட்லி பெங்களூருக்கு வந்தவுடன் எதியூரப்பா ஷிமோகாவுக்கு புறப்பட்டுச் சென்றுவிட்டார். தன்னுடைய நிகழ்ச்சி ஏற்கனவே திட்டமிடப்பட்டு இருந்ததால் செல்வதாவும், மேலும், தனக்கு கட்சியில் எந்த பதவியும் இல்லாததால் அவரை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படவில்லை என்றும், அதே சமயம் அருண் ஜேட்லி மீது அன்பும், மதிப்பும் வைத்திருப்பதாகவும் எதியூரப்பா கூறினார்.
கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு மே மாதம் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந் நிலையில் கட்சியின் மாநிலத் தலைவர் பதவி கிடைக்காவிட்டால் பாஜகவில் இருந்து விலகுவது குறித்து டிசம்பர் மாதம் இறுதி முடிவு எடுப்பேன் என்று எதியூரப்பா ஏற்கனவே அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications