வடகிழக்கு மாநிலங்கள், இமாச்சல் பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்-உயிர்சேதம் இல்லை

Subscribe to Oneindia Tamil

கவுகாத்தி: இமாச்சல பிரதேசம், அஸ்ஸாம் ஆகிய பகுதிகளில் இன்று காலையில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் உயிர்சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை.

அஸ்ஸாம் மாநிலத்தின் மத்திய பகுதியான ரங்கபுரா என்ற இடத்தில் நள்ளிரவு 12.30 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 5.1 ரிக்டர் என்று பதிவானது. அசாமில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தொடர்ச்சியாக இன்று அதிகாலையில் நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள மேகாலயா, நாகலாந்து, மணிப்பூர் மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கம் ஏற்பட்ட போது, பயத்தில் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் சாலையில் குவிந்தனர். சிறிது நேரத்திற்கு பிறகு சகஜ நிலை ஏற்பட்டதால் மக்களின் பயம் நீங்கி, வழக்கம் போல செயல்பட துவங்கினர். நிலநடுக்கத்தினால் உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+