கருணாநிதி ஆக.20ல் எழுதிய கடிதத்திற்கு செப்.25ல் பதிலளித்த பிரதமர்-அக்.2ல் வெளியிட்ட திமுக!

Subscribe to Oneindia Tamil

Karunanidhi and Manmohan Singh
சென்னை: ஈழத் தமிழர் விவகாரம் தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி திமுக தலைவர் கருணாநிதி எழுதிய கடிதத்திற்கு செப்டம்பர் 25ம் தேதி பதில் அனுப்பியுள்ளார் பிரதமர் மன்மோகன் சிங். அந்தக் கடித விவரத்தை அக்டோபர் 2ம் தேதியான நேற்றுதான் வெளியிட்டுள்ளது திமுக.

இதுதொடர்பாக அதில் கூறப்பட்டுள்ளதாவது:

இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் பிரச்சினை தொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் 20-ந்தேதி நீங்கள் எழுதிய கடிதத்திற்கு நான் பதில் எழுதுகிறேன்.

உங்கள் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பிரச்சினைகளை நான் கவனத்தில் கொண்டுள்ளேன். இலங்கையில் போர் முடிவுக்கு வந்தபிறகு மத்திய அரசு அங்குள்ள தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டுள்ளது என்பதை இந்த நேரத்தில் வலியுறுத்தி தெரிவித்துக்கொள்கிறேன்.

இலங்கை தமிழ் மக்களின் மறு குடியமர்வு மற்றும் மறுவாழ்வுக்கு அதிகபட்ச முன்னுரிமையை மத்திய அரசு அளித்து வருகிறது. இலங்கையில் அதிகார பகிர்வு குறித்து அங்குள்ள தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்த வேண்டியது அவசியம் என்று இலங்கை அரசிடம் வலியுறுத்தி கூறியுள்ளோம்.

எதிர்காலத்தில் இலங்கையில் தமிழ் மக்கள் சம உரிமையுடனும், மதிப்புடனும், சுயமரியாதையுடனும் வாழ்வது தொடர்பாக, இலங்கை அரசுடன் நாங்கள் தொடர்ந்து பேசி வருகிறோம் என்று பிரதமர் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+