சோனியா பேச்சைக் கூட பத்திரிக்கைகள் போடவில்லை-நரேந்திர மோடி கிண்டல்

Subscribe to Oneindia Tamil

Narendra Modi
தகோட் (குஜராத்): குஜராத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பேச்சைக் கூட பெரும்பாலான பத்திரிக்கைகள் வெளியிடவில்லை. படத்தை மட்டுமே போட்டுள்ளனர். காரணம், இங்கு சோனியா எந்த முக்கிய விஷயத்தையும் பேசவில்லை. குஜராத்தில் காங்கிரஸ் பேசுவதற்குக் கூட எதுவும் இல்லை என்று அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

தகோட் பகுதியில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், மக்களுக்குத் தந்த எந்த உறுதிமொழியையும் காங்கிரஸ் கடைபிடித்ததில்லை. நாட்டில் விலைவாசி உயர்வுக்கு காங்கிரசே காரணம்.

கடந்த தேர்தல் சோடே உதேபூரில் சோனியா தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசினார். அங்கு பாஜகவே வென்றது. இந்த முறை ராஜ்கோட்டில் பேசியுள்ளார். இதனால் ராஜ்கோட் மாவட்டத்தில் எல்லா தொகுதிகளிலும் பாஜகவே வெல்லும்.

நேற்று குஜராத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்த சோனியா காந்தியின் பேச்சைக் கூட பெரும்பாலான பத்திரிக்கைகள் வெளியிடவில்லை. பெரிய படத்தை மட்டுமே போட்டுள்ளனர். காரணம், இங்கு சோனியா எந்த முக்கிய விஷயத்தையும் பேசவில்லை. குஜராத்தில் காங்கிரஸ் பேசுவதற்குக் கூட எதுவும் இல்லை என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+