For Quick Alerts
For Daily Alerts
Just In
கருஞ்சட்டையுடன் மனிதச் சங்கிலிகளாக நின்று உணர்வுகளை வெளிப்படுத்துங்கள்.. ஸ்டாலின் அழைப்பு
இதுதொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:
அதிமுக ஆட்சியில், வரலாறு காணாத மின்வெட்டு, ஏழை, எளிய, நடுத்தர மக்களின் அத்தியாவசிய அன்றாடத் தேவைகளான பால்விலை உயர்வு - பஸ் கட்டணம் உயர்வு - மின் கட்டணம் உயர்வு, அரிசி உள்ளிட்ட அனைத்துப் பொருட்களுமே விலை உயர்வு. இதனால் அனைத்துத் தரப்பினருமே பாதிப்புக்குள்ளாகின்றனர்.
அதிமுக அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற திமுக தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, 5-ந் தேதி, பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை, தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறும் கறுப்பு உடை அணிந்து, மனித சங்கிலியும் அமைத்து ஆர்ப்பாட்டங்களில் இளைஞர் அணியினர் பெருமளவில் பங்கேற்று, தமது உணர்வுகளை வெளிப்படுத்திட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
Comments
English summary
DMK treasurer M.K.Stalin has called partycadres to attend human chain protest en masse tomorrow.
Story first published: Thursday, October 4, 2012, 8:08 [IST]