பெங்களூரில் கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர் பேரணி.. அம்பரீஷ் பங்கேற்பு

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் குறிப்பாக மாண்டியா, மைசூர், சாம்ராஜ் நகர் போன்ற காவிரி டெல்டா மாவட்டங்களில் இருந்து இந்த அமைப்பினர் இன்று பெங்களூரில் குவிந்தனர்.
பசவனகுடி நேசனல் காலேஜ் மைதானத்தில் இருந்து இவர்கள் அந்த அமைப்பின் தலைவர் நாராயண கெளடா தலைமையில் பேரணியாகப் புறப்பட்டு ராஜ்பவன் சென்றனர்.
இந்தப் பேரணி காரணமாக பெங்களூரில் பதற்றம் நிலவியது. ஆனாலும் பேரணி அமைதியான முறையில் நடந்து முடிந்தது.
முன்னதாக இந்தப் பேரணியை நடிகர் அம்பரீஷ் துவக்கி வைத்தார். கூட்டத்தினரிடையே அவர் பேசுகையில், நான் காசு பணத்துக்காகவோ, அதிகாரத்துக்காகவோ இங்கு வரவில்லை. கர்நாடகத்தின் உரிமைக்காக வந்துள்ளேன் என்றார்.
பேரணியின் முடிவில் ஆளுநர் பரத்வாஜிடம் நாராயண கெளடா கோரிக்கை மனுவை அளித்தார். அதைப் பெற்றுக் கொண்டு பேசிய பரத்வாஜ், மத்திய அரசு எந்த மாநிலத்துக்கு எதிராகவும் செயல்படாது. காவிரி விஷயத்தில் கர்நாடகத்தின் கோரிக்கையை நான் ஆதரிக்கிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications