அரசு நிலம் ஆக்கிரமிப்பு: கேரள அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவு

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜார்ஜ். இவர் மலையாள வேதி என்ற இயக்கத்தின் தலைவராக உள்ளார். இவர் திருச்சூர் விஜிலென்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், இடுக்கி மாவட்டம் நாடுகாணி பகுதியில் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட 75 ஏக்கர் நிலம் உள்ளது. இதை நீர்பாசன துறை அமைச்சர் பி.ஜே.ஜோசப் பினாமி பெயரில் ஆக்கிரமித்து உல்லாச விடுதி கட்டி உள்ளார்.
இதற்கு முன்னாள் வருவாய்துறை அமைச்சர் இஸ்மாயில் உடந்தையாக இருந்துள்ளார். இது குறித்து ஏற்கனவே விஜிலென்ஸ் கமிஷன் விசாரணை நடத்தி அறிக்கையில ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது உண்மை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் அமைச்சர் ஜோசப், முன்னாள் அமைச்சர் இஸ்மாயில் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டது. மேலும் இது குறித்து அறிக்கையை விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications