தருமபுரி மாவட்டத்தில் ஒரே நாளில் 30 போலி டாக்டர்கள் கைது
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் மருத்துவப்பட்டம் பெறாமலேயே சிகிச்சை அளித்து வந்த 30க்கும் மேற்பட்ட போலி டாக்டர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
தருமபுரி மாவட்டத்தில் போலி டாக்டர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறைக்கு பல்வேறு இடங்களிலும் இருந்தும் புகார் வந்தது. இதனடிப்படையில் சுகாதாரத் துறை மற்றும் காவல் துறையினர் இணைந்து திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில், தருமபுரி மாவட்டத்தின் அரூர், பெண்ணாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, தருமபுரி ஆகிய இடங்களில் ப்ளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் டி.பார்ம்., படித்து விட்டு, பலரும் அனுபவ அடிப்படையில், ஆங்கில சிகிச்சை அளித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து தர்மபுரி சப் - டிவிஷனில், 14 பேரையும், அரூர் சப் டிவிஷனில் , 17 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து மருத்துவ உபகரணங்கள், ஆங்கில முறை மருந்து, மாத்திரைகளையும், போலீசார் பறிமுதல் செய்தனர். மாவட்டம் முழுவதும் இன்றும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதால், இந்த எண்ணிக்கை மேலும் கூடும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications