தமிழகத்தில் காவிரி உரிமை மீட்பு குழுவினர் ரயில் மறியல்- ஆயிரக்கணக்கானோர் கைது
தஞ்சாவூர்: தமிழகத்தில் டெல்டா மாவட்ட சாகுபடிக்காக காவிரியில் இருந்து தினமும் 2 டிஎம்சி நீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என்று வலியுறுத்தி தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பெண்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாய சங்கங்கள், கட்சிகள் அடங்கிய காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடந்தது தஞ்சாவூர், கும்பகோணம் உள்பட பல்வேறு இடங்களில் ரயில் மறியல்கள் நடந்தன.
மயிலாடுதுறையில் இருந்து திருச்சி சென்ற பாசஞ்சர் ரயில், சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் உள்பட பல்வேறு ரயில்கள் மறிக்கப்ட்டன.
இதையடுத்து பெண்கள் உள்பட 600 பேர் கைது செய்யப்பட்டனர். அதே போல நாகப்பட்டிணத்தில் ரயில் மறியலில் ஈடுபட்ட 200 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவாரூர் மாவட்டத்தில் ரயில் மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட மொத்தம் 450 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிதம்பரம் ரயில் நிலையத்தில் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலை போராட்டக் குழுவினர் மறித்து கர்நாடக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 95 பேரை போலீசார் கைது செய்தனர்.
முன்னதாக காலை 7.45 மணிக்கு நாகூரில் இருந்து பெங்களூருக்கு சென்ற ரயிலை தமிழக இளைஞர் முன்னணியினர் மறித்து கர்நாடகா அரசுக்கு எதிராக கண்டன கோஷமிட்டனர். அவர்கள் 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சியில் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் ரெயில் மறியலில் ஈடுபட்ட மதிமுக மாவட்டச் செயலாளர் மலர்மன்னன் உள்பட 175 பேர் கைது செய்யப்பட்டனர்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications