மகனோடு ஓடிப்போன 'செம்மண் கொள்ளை' பொன்முடியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

Subscribe to Oneindia Tamil

Ponmudi
சென்னை: செம்மண் கொள்ளையில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில் சிக்கி மகனோடு தற்போது தலைமறைவாக இருக்கும் முன்னாள் அமைச்சர் க. பொன்முடி உள்ளிட்ட 4 பேரின் முன்ஜாமீன் மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

செம்மண் குவாரி எடுத்திருந்த பொன்முடி அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகளவு வெட்டி எடுத்தார் என்பது புகார். இந்தப் புகாரின் பேரின் பொன்முடி, அவரது மகன் கவுதசிகாமணி உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கைதாகாமல் இருக்க பொன்முடி தனது மகனோடு தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார். மகனோடு ஓடிப் போன பொன்முடி உள்ளிட்டோரை கைது செய்ய தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனிடையே பொன்முடி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பொன்முடி உள்ளிட்ட 4 பேரின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

மாறுவேடத்தில் பொன்முடி?

இதனால் பொன்முடி சரணடையவேண்டிய நிலை உள்ளது. ஆந்திரா எல்லையோரம் உள்ள தமது மாமியார் ஊரில் மொட்டையடித்த நிலையில் பொன்முடி பதுங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. பொன்முடியை தூக்குவதற்காக அவரது நெருங்கிய நண்பரான கோதகுமார் என்பவரை சில நாட்களுக்கு முன்பு போலீஸ் விசாரணை நடத்தி கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+