யாழ்ப்பாணத்தில் ஐக்கிய நாடுகள் சபை குழு
Subscribe to Oneindia Tamil
யாழ்ப்பாணம்: ஐக்கிய நாடுகள் சபையின் உதவி செயலாளர் அஜய சிப்பர் இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் மக்கள் பிரதிநிதிகளை சந்தித்துப் பேசினார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் அஜய் சிப்பர் தலைமையிலான குழுவினர் முதலில் யாழ். மனித உரிமை ஆணைக்குழுவின் பிரதிநிதிகளை சந்தித்துப் பேசினர். பின்னர் மாவட்ட அரசு செயலாளர் சுந்தரம் அருமைநாயகத்தை சந்தித்தனர்.
யாழ். மாவட்டத்து அபிவிருத்தித் திட்டங்கள், மீள்குடியேற்றம், கண்ணி வெடி அகற்றல் மற்றும் மீள்குடியேறிய மக்களுக்கு அரசால் வழங்கப்படும் உதவிகள் ஆகியவை பற்றி அஜய்சிப்பர் குழுவினர் கேட்டறிந்தனர்.
மேலும் மீள்குடியேற்றப்படும் மக்களின் வாழ்வாதார உதவிகள் மற்றும் கட்டிடங்கள் புனரமைப்புக்கு ஐக்கிய நாடுகள் உதவிகளை வழங்கும் என்று அஜய் சிப்பர் குழுவினர் உறுதி அளித்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications