கர்நாடக பந்த்- தமிழக வாகனங்களை ஒசூர் எல்லையில் தடுத்து நிறுத்திய கன்னட அமைப்பினர்
Subscribe to Oneindia Tamil

தமிழக அரசுப் பேருந்துகள் ஒசூரிலேயே நிறுத்தப்பட்டுவிட்ட நிலையில் தனியார் பஸ்களும், கார்கள், பிற வாகனங்களும் வழக்கம் போல் பெங்களூருக்கு வந்தன. இந் நிலையில் இன்று பிற்பகலில் கன்னட அமைப்பினர் ஒசூர் அருகே கர்நாடக எல்லையில் ஜூஜூவாடியில் குவிந்து தமிழகத்தில் இருந்து வந்த வாகனங்களைத் தடுத்து நிறுத்தினர். இதனால் அதில் வந்தவர்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாயினர்.
பல வாகனங்கள் திரும்பச் சென்றுவிட்டன.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதி பண்ணாரியிலும் தமிழக வாகனங்கள் நிறுத்தப்பட்டுவிட்டன. லாரிகளும் பேருந்துகளும் சுற்றுலா வாகனங்களும் நூற்றுக்கணக்கில் பண்ணாரி எல்லையில் நிறுத்தப்பட்டன.












Click it and Unblock the Notifications