இடிந்தகரைக்கு போலீசார் வருவதை தடுக்க சாலையில் பள்ளம் தோண்டிய பொக்லைன் ஓட்டுநர் கைது
கூடங்குளம்: கூடங்குளம் அணு உலையை திங்கள்கிழமையன்று கடல்வழியே முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதன் ஒருபகுதியாக இடிந்தகரையில் போலீஸ் நுழைவதைத் தடுக்கும் வகையில் சாலையில் பள்ளம் தோண்டியதாக பொக்லைன் ஓட்டுநர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தற்போது திங்கள்கிழமையன்று கடல்வழியே அணு உலையை முற்றுகையிடப் போவதாக அறிவித்துள்ளனர்.
இந்தப் போராட்டத்தின் போது இடிந்தகரை கிராமத்துக்குள் போலீசார் நுழைவதைத் தடுக்கும் வகையில் சாலையில் பள்ளங்கள் தோண்டப்பட்டன. இந்தப் பள்ளங்களைத் தோண்டியதாக பொக்லைன் ஓட்டுநர் மாரியப்பன் என்பவரை போலீசார் கைது செய்திருக்கின்றனர். சாலையை சேதப்படுத்தியதற்கு உடந்தையாக இருந்த போராட்டக் குழுவினர் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது.
கடல் வழியே சென்று 8-ந் தேதியன்று முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால் அப்பகுதியில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடலோர காவல்படையின் ரோந்து படகுகளும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் கூடங்குளம் பகுதியில் மீண்டும் பதற்றமான ஒரு சூழ்நிலை நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications