என்னை எதிர்த்து போட்டியிட தயாரா?: மன்மோகனுக்கு நரேந்திர மோடி சவால்

தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நரேந்திர மோடி பேசியதாவது:
பிரதமர் மன்மோகன்சிங்குக்கு நான் சவால்விடுகிறேன்.... குஜராத் மாநில பேரவைத் தேர்தலில் என்னை எதிர்த்து அவரால் போட்டியிட முடியுமா? நீங்களும் சாலைகள் அமைத்தீர்கள்.. நானும் சாலைகளைப் போட்டிருக்கிறென்.. நீங்கள் கால்வாய்களை உருவாக்கியிருக்கிறீர்கள்... நானும் அதை செய்திருக்கிறேன்.. இருவருமே மக்களுக்காக செய்திருக்கிறோம்.. வாருங்கள் இருவரும் போட்டியிடலாம்.. மக்கள் யாரை ஒப்புக் கொள்கிறார்கள் என பார்த்துவிடலாம்..
டெல்லியை ஆளும் சுல்தான்களே! குஜராத் மீது நீங்கள் சவாரி செய்த காலம் மலையேறிவிட்டது. 100 நாட்களில் பண வீக்கத்தை கட்டுப்படுத்துவோம் என்று ஆட்சிப் பொறுப்பேற்றபோது சோனியா காந்தி உறுதியளித்தார். ஆனால் நடந்ததா? இல்லையே! குஜராத்தில் தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த சோனியா காந்தி, இந்த பணவீக்கம் பற்றி ஏன் எதுவுமே பேசவில்லை.. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த தவறியதற்காக சோனியா காந்தி நாட்டு மக்களிடத்தில் மன்னிப்பு கேட்டாக வேண்டும் என்றார் மோடி.












Click it and Unblock the Notifications