For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையில் துப்பாக்கிச் சண்டை- படுகாயத்துடன் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை மதுரவாயலில் தொழில் போட்டியால் இருவர் துப்பாக்கியால் சுட்டு சண்டை போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டிருக்கிறது.

மதுரவாயலில் மணிக்குமார் என்பவர் மீது அவரது தொழில் போட்டியாளர் ஒருவர் இன்று காலை துப்பாக்கியால் சுட்டிருக்கிறார். இதில் படுகாயமடைந்த மணிக்குமார் தனியார் மருத்துவமனையில் சிக்ச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். சம்பவ இடத்தில் 4 தோட்டாக்கள் சிதறிக் கிடந்ததால் மணிக்குமாரும் திருப்பி சுட்டிருக்கக் கூடும் என்று போலிசார் சந்தேகிக்கிறார்.

துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்ட இருவரும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இருவரும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததால் தொழில் போட்டியால் துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக மதுரவாயல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

English summary
Gunfire in Chennai shocked residents of Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X