குற்றாலம் அருவிப் பூங்கா-முதல்வர் நாளை திறந்து வைக்கிறார்

குற்றாலத்தில் சீசன் காலமான ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்கள் தவிர பிற மாதங்களில் அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருவதில்லை. எனவே ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வந்து செல்லும் வகையில் ஐந்தருவியில் உள்ள தோட்டக்கலை துறைக்கு சொந்தமான பழந்தோட்ட பண்ணையை ரூ.6 கோடி செலவில் அருவி பூங்காவாக மாற்றும் பணி நடைபெற்றது.
வண்ணத்துபூச்சி பூங்கா, நடைபாதை, நடனமாடும் நீருற்று, உணவகம், புல்வெளி, சிறுவர் விளையாட்டு பூங்கா, பேரணி பூங்கா, பார்வையாளர் மடம், தாழ்தள பூங்கா, மரப்பாலம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளது. எனவே பூங்காவை முதல்வர் ஜெயலலிதா நாளை வீடியோ கான்பிரான்ஸ் மூலம் திறந்து வைக்க உள்ளார்.
இதற்காக ஐந்தருவி அருவி பூங்காவில் வீடியோ கான்பிரான்ஸ் உபகரணங்கள் அமைக்கும் பணி, முதல்வர் திறந்து வைப்பதை காணும் வகையில் திரை, அரசு அதிகாரிகள் அமர்வதற்கான பந்தல் ஆகியவை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications