5 ஆண்டுகளில் தடையில்லா மின்சாரம் வழங்க முடிவாம்: சொல்கிறார் பிரதமர்

டெல்லியில் மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகமும், மத்திய வர்த்தக கூட்டமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்த மாநாட்டில் பேசிய பிரதமர் இதனைத் தெரிவித்தார். மாநாட்டில் பிரதமர் பேசியதாவது:
கிராமப்புறங்களில் உள்ள வீடுகள் அனைத்துக்கும் சமையல் எரிவாயு இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கிராமப்புறங்களில் உள்ள 19 கோடி வீடுகளில், 12 சதவீத வீடுகளில் மட்டுமே சமையல் எரிவாயு இணைப்பு பயன்படுத்தப்படுகிறது. நாட்டில் உள்ள 24 கோடி வீடுகளுக்கும் ஆண்டுக்கு தலா 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்க, 2.5 கோடி டன் எரிவாயு மட்டுமே தேவை. இது சமாளிக்கக் கூடியதுதான். இருப்பினும், கிராமப்புறங்களில் உள்ள வீடுகள் அனைத்துக்கும் சமையல் எரிவாயு இணைப்பு வழங்க சற்று காலம் தேவைப்படும். தகுதியுள்ள மக்களுக்கு மட்டுமே மானியம் கிடைப்பதற்கான நடைமுறையை மத்திய அரசு வகுத்து வருகிறது. இதன் மூலம், மின்சாரத்தையும் சமையல் எரிவாயுவையும் அவர்கள் சலுகை விலையில் வாங்கி பயன்படுத்த முடியும்.
நாட்டில் உள்ள வீடுகள் அனைத்துக்கும் நாள் முழுவதும் மின்சாரம் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அடுத்த ஐந்தாண்டுகளில் எல்லா வீடுகளுக்கும் குறைந்த விலையில் மின்சாரம் வழங்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. 2 கோடி வீடுகளுக்கு 2022,ம் ஆண்டுக்குள் சூரிய ஒளி மூலம் தயாரிக்கப்படும் மின்சாரம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்றார்.
கர்நாடகாவில் உள்ள மைசூர் மாவட்டத்தில் மானிய விலையிலான 27 ஆயிரம் சமையல் எரிவாயு சிலிண்டர்கள், வீட்டில் உள்ளவர்களிடம் பயோ,மெட்ரிக் அடையாளத்தின் மூலம் வெற்றிகரமாக விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக, வங்கி கணக்கு மூலம் மானிய தொகை வழங்கப்படும் இவ்வாறு பிரதமர் பேசினார்.












Click it and Unblock the Notifications