இனிமேல் ''மேதகு" என்ற வார்த்தையே கூடாது.. மாண்புமிகு, ஸ்ரீ, ஸ்ரீமதிக்கு ஓகே: பிரணாப் முகர்ஜி
டெல்லி: ஆங்கிலேயர் காலத்திலிருந்து பின்பற்றப்பட்டு வரும் மரபுகளை ஆய்வு செய்து அவற்றைக் கைவிட குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உத்தரவிட்டிருக்கிறார்.
குடியரசுத் தலைவர், ஆளுநர் உள்ளிட்ட உயர் பதவி வகிப்போரை மேதகு' என்ற வார்த்தையால் அழைப்பது வழக்கம். இனி இந்த வார்த்தையை உள்நாட்டு நிகழ்ச்சிகளிலோ, உள்நாட்டு தலைவர்களுடனான சந்திப்புகளின்போதோ பயன்படுத்தக்கூடாது. இத்தகைய நிகழ்ச்சிகளில், இந்தியில், மகாமகின்' என்ற வார்த்தைக்கு பதிலாக ராஷ்டிரபதி மகோதாய்' என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டும். இருப்பினும், மேதகு' என்பதை வெளிநாட்டு தலைவர்களுடனான சந்திப்பின்போது மட்டும் பயன்படுத்தலாம். குடியரசுத் தலைவர், ஆளுநர் பதவிகளுக்கு முன்பாக மாண்புமிகு' என்ற வார்த்தையையும், பெயருக்கு முன்பாக, இந்திய பாரம்பரியப்படி, ஸ்ரீ' என்றோ, ஸ்ரீமதி' என்றோ குறிப்பிட வேண்டும்.
மேலும், அரசு குறிப்புகளில், மகாமகின்' என்ற வார்த்தைக்கு பதிலாக ராஷ்டிரபதி ஜி' என்று பயன்படுத்தப்படும். இதேபோல் தாம் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை கூடுமானவரை குடியரசுத் தலைவர் மாளிகையிலேயே நடத்துமாறும் பிரணாப் முகர்ஜி உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications