பெண்களுக்கு ஆபாச எம்.எம்.எஸ் அனுப்பினால் 3 ஆண்டு சிறை- மத்திய அரசு பரிசீலனை

பெண்களை மோசமாக சித்திரிப்பது, ஆபாசமாக காட்டுவது, இழிவுப்படுத்தும் வகையில் நடத்துவது போன்ற குற்றங்களுக்கு கடந்த 1986ம் ஆண்டு தடுப்பு சட்டத்தின் கீழ் ரூ.2 ஆயிரம் அபராதமும், 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு வந்தது.
ஆனால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தற்போது அதிகரித்து வருகிறது. தற்போது செல்போன்கள் மற்றும் இணையதளம் மூலமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. பெண்களுக்கு ஆபாசமான எம்.எம்.எஸ் மற்றும் இமெயில் அனுப்புதல் போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகிறது.
இதையடுத்து பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனை கடுமையாக்க, பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பான மத்திய சட்ட அமைச்சரகத்திற்கு பல்வேறு பரிந்துரைகளை, பெண்கள் நல அமைச்சரகம் அனுப்பியுள்ளது.
இதன்படி பெண்களுக்கு ஆபாச எம்.எம்.எஸ், இமெயில் அனுப்புவோருக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை அபராதமும், 3 ஆண்டு சிறை தண்டனையும் வழங்க வேண்டும். பொது இடத்தில் பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் அவர்களின் உடல்பகுதியோ, கேலி சித்திரமே வெளியிடுவோருக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும்.
அதேபோல பத்திரிக்கை துறை மற்றும் விளம்பர துறையை சேர்ந்தவர்களும், பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் படங்களை வெளியிட்டால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த பரிந்துரை குறித்து மத்திய அமைச்சரவை இன்று பரிசீலனை செய்ய உள்ளதாக தெரிகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சரகம் அளித்துள்ள பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்று கொண்டால், இது தொடர்பான சட்ட திருத்தம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications