வீரப்பனின் 8வது நினைவு நாள்- குடும்பத்தினர் அஞ்சலி செலுத்த திட்டம்?
Subscribe to Oneindia Tamil

சந்தனக் கடத்தல் வீரப்பன் கடந்த 2004ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி தமிழக போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடல் மேட்டூர் அருகே உள்ள மூலக்காட்டில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
வீரப்பனின் 8ம் ஆண்டு நினைவு நாள் வரும் 18ம் தேதி வருகிறது. இந்த நாளில் வீரப்பன் சமாதியில், வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி, அவரது மகள்கள் வித்யாராணி, பிரபாவதி, வீரப்பனின் அண்ணன் மனைவி மாதம்மாள், மாதையனின் மருமகன் முனுசாமி மற்றும் ஊர்மக்கள் அஞ்சலி செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் நினைவு நாளை முன்னிட்டு மலைவாழ் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வீரப்பன் மனைவி முத்துலட்சுமி வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. இத்தகவலை அடுத்து மேட்டூரை சுற்றியுள்ள பகுதியில் இப்போதே உளவுத்துறை போலீசாரும், கியூ பிரிவு போலீசாரும் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.












Click it and Unblock the Notifications