பாஜக தலைவர் கட்காரிக்கு எதிராகவும் போர் தொடங்கிய கெஜ்ரிவால்!
டெல்லி: அடுத்து தனது அஸ்திரத்தை பாஜக தலைவர் கட்காரி பக்கம் திருப்பியுள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால்.
காந்தி பிறந்த நாளில் தனிக்கட்சி தொடங்கிய அரவிந்த் கெஜ்ரிவால், அடுத்தடுத்து அதிரவலைகள் கிளப்பி வருகிறார்.

ஆனால் தாம் யாருக்கும் ஆதரவானவர் இல்லை என்பதை விளக்கும் வகையில், பா.ஜனதா கட்சியின் தலைவர் நிதின் கட்காரிக்கு எதிரான தகவல்களை கெஜ்ரிவால் வெளியிட உள்ளார்.
இதுபற்றி கெஜ்ரிவாலின் நெருங்கிய நண்பரும், ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பின் உறுப்பினருமான அஞ்சலி தமானியா நாக்பூரில் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் நிதின் கட்காரி பற்றிய தகவல்கள் மற்றும் ஆவணங்களை சேகரித்துள்ளேன். இதுபற்றிய விவரங்களை நானும் கெஜ்ரிவாலும் இணைந்து வரும் செவ்வாய்க்கிழமை பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிட உள்ளோம்' என்றார்.
அஞ்சலி தமானியா, மகாராஷ்டிராவில் அணைகள் மற்றும் கால்வாய்கள் கட்டுவதில் ரூ.70 ஆயிரம் கோடி அளவுக்கு நடந்த முறைகேடு நடந்ததை கடந்த மாதம் தெரியப்படுத்தினார்.
அதன்பின்னர் நிருபர்களிடம் கூறிய அஞ்சலி, என்னை கட்காரி தரப்பினர் சந்தித்து, சரத்பவாருடன் கட்காரி வர்த்தக தொடர்பு வைத்திருப்பதால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் சேகரித்த தகவல்களை கோர்ட்டுக்கு கொண்டு போகக்கூடாது என்று கேட்டுக்கொண்டனர் என்றார்.
ஆனால் அஞ்சலியை சந்திக்கவில்லை என்று கூறிய கட்காரி, அவர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications