நவராத்திரி விழா: சுவாமி சிலைகள் திருவனந்தபுரம் புறப்பட்டது
குமரி: நவராத்திரி விழாவில் பங்கேற்க பத்மநாபபுரத்தில் இருந்த சுவாமி சிலைகள், திருவனந்தபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைவதற்கு முன் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்தது. இந்த சமஸ்தானத்தின தலைநகராக பத்மநாபபுரம் இருந்தது. அப்போது அரண்மனையில் நவராத்திரி விழா கோலகலமாக கொண்டாடப்பட்டு வந்தது. அதன்பிறகு ராஜ குடும்பத்தினர் திருவனந்தபுரத்திற்கு சென்று அங்கு நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்காக ஒவ்வொரு ஆண்டும் பத்மநாபபுரம் தேவார கெட்டு சரஸ்வதி அம்மன் கோவிலில் இருந்து சிலைகள், திருவனந்தபுரம் கொண்டு செல்லப்படும். சரஸ்வதி தேவிக்கு பக்க துணையாக சுசீ்நதிரம் முன்னுநித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன் ஆகிய சிலைகள் கேரள பராம்பரிய வரவேற்புடன், திருவனந்தபுரம் கொண்டு செல்லப்படும்.
இந்த ஆண்டு வரும் 15ம் தேதி திருவனந்தபுரத்தில் நவராத்திரி விழா துவங்குகிறது. அன்று குமரி மாவட்டத்தில் இருந்து கொண்டு செல்லப்படும் சிலைகள் நவராத்திரி பூஜையில் வைக்கப்படும்.
இந்த விழாவுக்காக பத்மநாபபுரம் தேவராக்கெட்டு சரஸ்வதி தேவி, சுசீந்திரம் முன்னுநித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன் ஆகிய சுவாமி சிலைகள் நேற்று காலை பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு பவனியாக கொண்டு செல்லப்பட்டன.
இந்த நிகழ்ச்சிக்காக சுசீந்திரத்தில் இருந்து முன்னுநித்த நங்கை அம்மன் பத்மநாபபுரம் புறப்படும் நிகழ்ச்சி நேற்று காலையில் நடந்தது. குமரி மற்றும் கேரள போலீசாரின் அணுவகுப்பு மரியாதையுடன் செண்டை மேளம் முழங்க பல்லக்கு பவனி தொடங்கியது.












Click it and Unblock the Notifications