இடைத் தேர்தல்: பிரணாப் முகர்ஜி மகன் அபிஜித் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பிரணாப் முகர்ஜி மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள ஜாங்கிபூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டதால் தான் வகித்து வந்த நிதி அமைச்சர் பதவியையும், ஜாங்கிபூர் தொகுதி எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்தார். இதனால் அந்த தொகுதிக்கு கடந்த 10-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
இடைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி போட்டியிட்டார். மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி காங்கிரசுடன் உறவை முறித்துக் கொண்டாலும் இந்த இடைத்தேர்தலில் அபிஜித் முகர்ஜிக்கு எதிராக வேட்பாளராக நிறுத்தவில்லை. அபிஜித் முகர்ஜி, மார்க்சிஸ்ட் வேட்பாளர் முசாபர் உசேனை விட வெறும் 2,536 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதே தொகுதியில் பிரணாப் முகர்ஜி கடந்த தேர்தலில் 1 லட்சத்து 28 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது..












Click it and Unblock the Notifications