உயிரினங்களை காக்க... 'புன்னகை பூமி' சென்னையில் நடைப்பயணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: பூமியில் வாழும் அனைத்து உயிர்களையும் காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி, வரும் 19ம் தேதி சென்னையில் 'புன்னகை பூமி' அமைப்பின் சார்பாக நடைபயணம் நடைபெற உள்ளது.
பூமியில் வாழும் அனைத்து உயிர்களை காப்பாற்ற வேண்டும். இதன்மூலம் பூமியில் மனிதனின் வாழும் நாட்களை சிறப்பானதாக மாற்ற முடியும். இதை வலியுறுத்தும் வகையில், சென்னையில் புன்னகை பூமி என்ற அமைப்பின் சார்பாக நடைப்பயணம் நடைபெற உள்ளது.
வரும் 19ம் தேதி மாலை 4 மணிக்கு சென்னை மெரீனா சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகில் இருந்து துவங்கும் நடைப்பயணம் 2 கி.மீ தொடரும். இதில் பூமியில் உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள், தங்களின் நண்பர்கள், உறவினர்கள் ஆகியோருடன் கலந்து கொள்ளலாம் என்று புன்னகை பூமி அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications