கிரானைட் விவகாரம்: பிஆர்பி குடும்பத்தினர் உட்பட 8 பேருக்கு பிடிவாரன்ட்!
மதுரை: கிரானைட் முறைகேடு தொடர்பான வழக்கில் தலைமறைவாக உள்ள பி.ஆர்.பி. அதிபர் பழனிச்சாமியின் உறவினர்கள் உட்பட 8 பேருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து மேலூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் கிரானைட் முறைகேடு செய்தது தொடர்பாக இதுவரை 40க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்பேரில் பி.ஆர்.பி கிரானைட் அதிபர் பழனிச்சாமி உள்பட 30க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் தலைமறைவாக உள்ள பல குவாரி அதிபர்கள், பங்குதாரர்களை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் பி.ஆர்.பி. கிரானைட் அதிபர் பழனிச்சாமியின் உறவினர்கள், பங்குதாரர்கள் உள்ளிட்ட 8 பேரை கைது செய்ய பிடிவாரன்ட் பிறப்பிக்க கோரி தனிப்படை டி.எஸ்.பி தங்கவேல், மேலூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெய்குமார் பிறப்பித்துள்ள உத்தரவில்,
பி.ஆர்.பழனிச்சாமியின் மனைவி செல்வி, மகன்கள் சுரேஷ்குமார், செந்தில்குமார், சகோதரி மகன்கள் தெய்வேந்திரன், முருகன் என்ற முருகேசன், மருமகன் மகாராஜன் ஆகியோர் உள்பட மொத்தம் 8 பேருக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்படுகிறது என்று அந்த உத்தரவில் தெரிவித்தார்.
அதேபோல பிஆர்பி அதிபர் பழனிச்சாமியின் காவலை நீட்டிக்க கோரி, நேற்று மேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். போலீசாரின் கோரிக்கை ஏற்ற நீதிபதி, வரும் 29ம் தேதி வரை பழனிச்சாமியின் காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications