அமைச்சரவையில் ராகுல்?- ஜனாதிபதி-- பிரதமருடன் திடீர் சந்திப்பால் பரபரப்பு

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இருவரும் நேற்று தனித்தனியே சந்தித்துப் பேசினர். இதையடுத்து மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்படலாம் என்று கூறப்பட்டது.
அப்போது, ராகுலுக்கு நெருக்கமான சச்சின் பைலட், ஜோதிராதித்ய சிந்தியா, ஜிதின் பிரசாதா போன்ற இளம் இணையமைச்சர்கள், கேபினட் அமைச்சர்களாக பதவி உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் கூட்டணிக் கட்சிகளைத் தவிர்த்துவிட்டு அமைச்சரவை மாற்றத்தில் காங்கிரஸ் கட்சியினருக்கே அதிக வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் தெரிகிறது.
இந்த நிலையில் இன்று முற்பகல் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை ராகுல் காந்தி சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன்சிங்கையும் ராகுல்காந்தி சந்தித்துப் பேசினார். இதனால் நிச்சயமாக ராகுல் காந்திக்கு அரசாங்கத்தி; பெரிய அளவிலான ஒரு பொறுப்புக்கு வாய்ப்பு இருக்கிறது என்று 'மீண்டும்' கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications