டிஜிபி ராமானுஜம் பதவி நீடிப்பு விவகாரம்- கண்டு கொள்ளாத மத்திய அரசு!
சென்னை: தமிழக டிஜிபி ராமானுஜத்தின் பதவி நீடிப்பு குறித்து மத்திய அரசு கண்டும், காணாமல் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டிஜிபி ராமானுஜத்தின் பதவி காலம் வரும் நவம்பர் மாத்துடன் முடிவடைகிறது. அதனால் ராமானுஜத்திற்கு மேலும் 2 ஆண்டுகள் பதவி நீடிப்பு வழங்கப்படும் என்று கோட்டை வட்டார தகவல்கள் கூறியது. அதற்கு முதல்வர் ஜெயலலிதாவும் 'கிரீன் சிக்னல்' கொடுத்துவிட்டார்.
இதையடுத்து பதவி நீடிப்பு தொடர்பான ஆவணங்களை மாநில அரசு, மத்திய அரசிற்கு அனுப்பி வைத்துள்ளதாம். ஆனால் இதுவரை மத்திய அரசு தரப்பில் எந்த சாதகமான பதிலும் வராமல் இழுத்தடித்து வருவதாக, காவல் துறை வட்டாரத்தில் பேச்சு அடிப்படுகிறது.
ஆனால் கடைசி நேரத்தில் மத்திய அரசு அனுமதி வழங்கிவிடும். இது ஒரு பெரிய பிரச்சனை அல்ல என்கிறார்கள் போலீஸ் உயர் அதிகாரிகள். இது தொடர்பாக மத்திய அரசு என்ன முடிவை அறிவிக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.