தலைக்காவிரியில் தீர்த்தோத்பவா விழா.. தமிழக பக்தர்கள் அடியோடு 'மிஸ்ஸிங்'!
தலைக்காவிரி: கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் காவிரி ஆறு உற்பத்தியாகும் தலைக்காவிரியில், நடந்த வருடாந்திர தீர்த்தோத்பவா விழாவின்போது தமிழகத்திலிருந்து பக்தர்கள் வருகை மிக மிக குறைந்து காணப்பட்டது.
ஆண்டுதோறும் தலைக்காவிரியில் தீர்த்தோத்பவா என்ற நிகழ்ச்சி நடைபெறும். இதில் தமிழகத்திலிருந்தும் பெருமளவில் பக்தர்கள் கலந்து கொள்வர். இந்த ஆண்டு விழா நேற்று நடந்தது. ஆனால் தமிழக பக்தர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்த அளவில் இருந்தது.
தமிழகத்திற்குக் காவரி நீரைத் தருவதில்லை என்று கர்நாடக அரசு முரண்டு பிடித்து வருகிறது. இதற்காக தமிழகத்தை எதிர்த்து பல்வேறு போராட்டங்களையும் அவர்கள் நடத்தி வந்தனர். இதன் காரணமாகவே இந்த ஆண்டு விழாவுக்கு தமிழக பக்தர்கள் வருவதற்கு ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் குடகு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களை விட தமிழக மக்கள்தான் அதிக அளவில் வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல மைசூர், மாண்டியா மாவட்ட மக்களும் கூட இந்த முறை அதிக அளவில் இங்கு வரவில்லை.
மேலும் இந்த முறை அன்னதான நிகழ்ச்சிக்கு கோவில் நிர்வாகம் கட்டுப்பாடுகளை விதித்து விட்டது. மிகவும் குறைந்த அளவிலேயே அன்னதானம் வழங்க வேண்டும் என அது உத்தரவிட்டிருந்தது. இதனால் இங்கு வழக்கமாக அன்னதானம் வழங்கும் தமிழகத்தைச் சேர்ந்த செட்டியார் சமூக குடும்பம் ஒன்றும், கன்னட அமைப்பு ஒன்றும் இந்த முறை பெரும் ஏமாற்றத்தை சந்தித்தன. இதுவும் கூட கூட்டம் குறைந்து போனதற்கு காரணமாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications